எனக்கும் தெரியும்
உனக்கும் தெரியும்
இருவரும் சேர முடியாதென்று.
தெரிந்தும் காதலித்தோம்
விதியாவது நம்மை இணைக்குமென்று.
அதுவும் விலகிச்செல்கின்றது
தலையெழுத்தைப்பார்த்து.
தலையெழுத்தும்
எழுத்துப் பிழையாக
எழுதப்பட்டிருக்கின்றது
என் கவிதைகளைப் போன்று.
எழுதியவன்
விளக்கை அணைத்துவிட்டு எழுதினானோ..!
விளக்கமறியாமல் எழுதினானோ....!
யாரறிவார்...?
வற்றிப் போன குளத்தில்
பறக்க முடியாத ஆமையாய்
போனதே நம்காதல்.
பலில்லாத கிழவன்
சொல்லுக்கு ஆசை கொள்வதாய்
நாமும் ஆசை கொண்டோம்
எங்கோ ஒரு மூலையில் நின்றுகொண்டு.
நீயோ
தாய்க்கு ஏகபுதல்வி....
நானோ....
தாய்க்கு நான்காம் புதல்வன்.
கேள்விக்குறியோடுதான் நம்காதல்
இணையாத தண்டவாளமாய்.........
சோகம் பாடும் கருங்குயிலாய்
சோதனைகள் உரைக்கின்றேன்இ
வெந்தாமரை உன்னை நினைத்து
வெந்து துடிக்கின்றேன்.
No comments:
Post a Comment