காதலிக்க காட்டிய அக்கறையை
ஏன் "கல்யாணத்தில்" காட்ட
மறந்துஇ மறுத்து விட்டாய்..!..
உன் "கண்களில்" இருக்கும்
என் "உருவத்தை" ஏனோ..
கண்ணீரில் கரைக்கிறாய்...
கரணம் "ஆயிரம்" இருக்கும்
அதற்காக "காதலை"
மறுப்பதா?....
அன்பே!
சூழ்நிலை காரணமாய்
நீ "என்னை"
மறந்து வேறொரு வரை
"திருமணம்"
செய்தாலும்...
உன்னை வாழ்த்த வருவேன்...
அதுதான் என் கடைசி சந்திப்பு
என "நினைக்காதே?....
நீ என்னை
ஏமாற்றியதற்காக உனக்கு
"வலியை" தருவேன்..!
வயிற்றில் எட்டி "உதைப்பேன்"
உன் "கருவறையிலிருந்து"
"அழுது" கொண்டே வெளிவருவேன்....
அப்போதும் "உன்" உயிராக.......
Saturday, May 26, 2012
Tuesday, May 22, 2012
கண்ணீர்த் துளிகள்
உன்னை மறக்க முடியாமல்
நான் அழுத நேரங்கள்
என் கண்ணீர்த் துளிகள் கன்னங்களை வருடி
கீழே வழிந்தன....
அப்போதும் நீ உன் விரல்களால்
என் கன்னத்தை வருடிய பொழுதுகளே
என் நினைவில் தோன்றின...
வறண்ட என் உதட்டை நாவால் நனைத்தேன்...
நீ உன் உதடுகளை
எனக்கென கொடுத்த நிமிடங்களே
கண் முன் தெரிந்தன...
என் தாயின் அணைப்பிலும்
உன் ஸ்பரிசத்தையே உணர்ந்தேன்..
நெற்றியில் ஆடிய முடியை ஒதுக்கினேன்..
என் கூந்தலை நீ
கோதிய சுகத்தையே நான் உணர்ந்தேன்..
பலர் கூறினர்
உன்னை மறக்கும்படி..
என் இதயத்தில் நீ இருக்கிறாய் என்று
அதைப் பிடுங்கி வெளியே எறிந்தேன்...
இதயத்தில் மட்டுமா நீ இருக்கிறாய்???
இதயத்தின் துடிப்பால்
என்னுள்ளே ஓடிய உதிரமும்
உனக்கு தானே சொந்தம்??
அதையும் வற்றும்படி செய்தேன்..
என் உடலிலும் உன்
கை ரேகையைக் கண்டேன்..
அதையும் எரித்தேன்..
எனினும்
என் ஆவியிலும் உன் சுவாசம் உள்ளது..
என் மடமையைக் கண்டு
அது எள்ளி நகையாடியது..
என் ஆன்மாவில் உள்ள 'ஆண்' நீதான் என்று..
ஆன்மாவிற்கு அழிவில்லை என்பர்..
என்னுள்ளே இருக்கும் உனக்கும் தான்...
சொல்லிவிடு பெண்ணே...
காதலை தேடினேன்
காதலியாய் நீ வந்தாய்
என் வழி மறந்து விழி மூடி
உன் வழி வந்தேன்
கரம்கோர்த்து கைபிடித்து
பயணித்தேன் உன்னோடு
செல்லும் வழி அறியவில்லை
வழித்துணையாய் நீ வந்ததால்....
இன்று கண் திறந்து
பார்கிறேன் கடந்து வந்த
பாதைகள் தெரியவில்லை
நீ என்னோடு இல்லை என்பதை
மட்டும் உணர்கிறேன்
என் காதோடு கதைபேசிய உன்
உதடுகளை காணவில்லை
என் சுவாசம் தீண்டிய உன்
சுவாச காற்றும் அருகில் இல்லை
என் நிழல் சூழ்ந்த உன்
நிழல் காணவில்லை
என் விரல் கோர்த்த உன்
விரல்கள் காணவில்லை
ஏனோ தடுமாறுகிறேன்
நீ பிரிந்து சென்றுவிட்டாய் என
ஆனாலும் நண்ப மறுக்கிறது மனது....
காதல் சுவாசம் தந்து
என்னில் சிலநாள் வசித்துவிட்டு போனாய்
வசந்தமிழந்து போனது என் வாழ்நாள்.....
காதல் வந்த காரணம் அறியும் முன்பே
காதல் தோல்விதனை அறிய வைத்தாய்
காரணம் கேட்டால் யாரென எனை கேக்கிறாய்....
பிரியும் வரை தெரியவில்லை
நீ பிரிந்து செல்வாய் என
அறிந்தும் அறியாமலும் போன
என் காதல் நாட்களை புரிந்தும் புரியாமலும்
தனிமையில் புலம்பி நிற்கிறேன்....
காதல் சுகத்தில் திளைத்தவன்
காதல் வலியை ஏற்க்க மறுக்கிறேன்
இரண்டும் உன்னிடமே கற்றுக்கொண்டேன்...
மரணம் கூட வலியில்லை தினம்
உன்னால் மரணித்து பிறக்க கற்றுக்கொண்டேன்
தினம் உன் நினைவால்
தற்கொலை முயற்சி என்னில்
எப்படி நீ அறிவாய் தினம்
என் மனம் தற்கொலை செய்து
மரணவாசல் சென்றுவிட்டு மீண்டு வருவதை....
என்மீது காதல் வரவில்லை என்று
சொல்லிருக்கலாம்
ஒருதலை ராகமாய்
ஒரு வரி கவிதையாய்
ஒரு கை ஓசையாய்
உன் புகழ் பாடி உன்
நிழல்தனை நிஜமாக்கி வாழ்ந்திருப்பேன்.....
ஏன் என் காதலை ஏற்றாய்
இன்று எனை ஏற்க்க மறுக்கிறாய்
தனிமை எனை வாட்ட
தள்ளாடி விழுகிறேன் மரண பள்ளத்தில்
கை கொடுத்து தூக்க வேண்டாம்
காரணம் மட்டும் சொல்லிவிடு
மறுபிறவியில் உனக்கு பிடித்தவனாய் பிறப்பேன்
இன்று மகிழ்ச்சியோடு மரணிப்பேன்
காரணம் மட்டும் சொல்லிவிடு பெண்ணே...
Sunday, May 20, 2012
உயிர் கொடு...
இனிப்பைத் தேடி வந்த
எறும்பான என் மனதை
காலால் மிதித்துக் கொன்றது விதி!
வசந்தத்தின் வாசல் திறக்குமென நினைத்தேன்
வாடைக்காற்றுப் பட்டு,
வண்ணப்பூவாய் மலர்வேன் என மகிழ்ந்தேன்
இவை அனைத்தும் கண்முன்னே
வெறும் பகல்கனவாய்த் தோன்றி மறைந்தன!
உன்னோடு இருக்கையில்,
கருவறையின் வெட்பத்தை உணர்ந்தேன்
மணவறையின் மகிழ்ச்சியை அடைந்தேன்
ஆனால் இறுதியில்,
கல்லறையின் துக்கத்தை அளித்துச் சென்றாய்...
காகிதப்பூவில் தேனெடுக்கச் சென்ற
வண்டாக நான்...
வெறும் கனவுகள் கலைந்தாலும் பரவாயில்லை
என் வாழ்க்கையே தொலைந்ததை
எங்கு நான் கூற??
கைக்கு எட்டியது
வாய்க்கு எட்டவில்லை என்பர்..
எனக்கோஇவாய்க்கு எட்டியும்
வயிறு நிரம்பவில்லை...
மனதோடு முக்காலி போட்டு அமர்ந்துவிட்டது...
தொலைந்தது என் காதல் மட்டுமல்ல..
என் உயிருக்கு இருந்த காவலும் தான்..
இதயமே நொறுங்கியது..
எனினும்,
அதில் செதுக்கியிருந்த
உனது பெயர் மட்டும்
சிற்பமாய் மிளிர்ந்தது...
கவிஞன் பிழையாக எழுதி,
கிழித்துக் கசக்கி எறிந்த காகிதம்தான் நான்,
என்னைவிட சிறந்த கவிதையை நீ வடிக்கலாம்..
ஆனால்,
என் மீது பட்ட உன் கைரேகையை
யார் வந்து அழிப்பது?
என் கண்ணோரம் வழியும் உதிரத்தை
யார் வருந்தித் துடைப்பது?
நீ கூறிய ஒரு வார்த்தையில்
பிரிந்து போன என் உயிரை
யார் வந்து பெற்றுக் கொடுப்பது??
எனக்குத் தெரியும்...
உனக்கும்கூட தெரியும்...
உன்னைத் தவிர
வேறு யாராலும் அது இயலாதென்று...
உன்னை எதிர்பார்த்து,
நீ வரும் வழி தேடி
காத்து நிற்கிறேன்..
விரைவில் வந்து
உயிரற்ற என் உடலுக்கு
உயிர் கொடு...
ஒரு பெண்ணின் கதறல். . !
கற்பிழந்தவள் நான்
கவிதைக்கு சொந்தக்காரி. . !
பொய்க்காதல் புலவனே. . !
காரணமில்லாமல் வந்தாய்
காந்த வார்த்தைகள் கோர்த்து. . !
கண்டவுடன் கொண்டாய்
காதல் ஒன்றை. . !
.jpg)
எப்பொழுதும்
நினைத்திருந்தேன். . !
முழு காதலில்
மூழ்கி முட்டாள் ஆனவள்
நான்தானே. . !
நல்லவன் நீயடா என்று
நினைத்துதானே
விட்டுக்கொடுத்தேன்
என்னை
தொட்டுக்கொள்ளடா என்று. . !
தப்பானதே தவறுதலாக. . !
இரவிலே பிறந்துகிடந்தேன். . !
இராட்சச ரசிகா
நம்மை மறந்துகிடந்தேன். . !
என்னையோ மறந்து சென்றாய்
எங்கோ மறைந்து கொண்டு. . !
விடிந்தவுடன் கள்வன்
ஆனாயடா
நீ. . !
என்னருகில் மட்டும்
பணமிருந்திருந்தால்
என்ன பெயரோ
எனக்கென்ன பெயரோ. . ?
நல்லவேளை
இன்றும் நான்
கற்பிழந்தவள்தான். . ! ♥ ♥ ♥ ♥ ♥ ♥
தாஜ்மலும் நானுமும்
தாஜ்மகாலே
உன்னை போலதான் நானும்
.jpg)
நானும் காதலுடன் வாழ்கிறேன்
உண்மை காதலில்
நீ நிலைத்திருக்கிராய்
உண்மை காதலில்
நான் தவித்தொண்டு இருக்கிறேன்
உண்மை காதலினால்
உன்னில் வலிகள் இல்லை
உண்மை காதலினால்
என்னில் வலிகள்
நீ காதலுக்காக
கண்ணீர் விட்டு கலங்கவில்லை
நான் காதலுக்காக
கண்ணீர் வடித்து கலங்குகிறேன்
நீ நிலைத்திருக்கிராய்
உலக காதலுக்காக
நான் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்
அவளை நேசிப்பதற்காக
உன் கற்கள் ஒவ்வொரும் சொல்லும்
உன் உண்மை காதலை
என் அணுக்கள் ஒவ்வொரும் சொல்லும்
என் உண்மை காதலை
நீ உலகம் உள்ளவரை வாழ்ந்திடுவாய்
உலக காதலுக்காக
என் உயிருள்ளவரை வாழ்கிறேன்
என் அவளின் காதலுக்காக
உலக காதல் காவியமாக
நீ வாழ்கிறாய்
உன் காதல் காவியத்தில்
நானும் ஒன்றாகி விடுவேன்
என் மரணத்தின் பின்
காதல்
கண்கள் பார்த்து
வளர்ந்த காதல்.
கண்ணீராய் கரைந்து.....
தூரங்கள் பிரிந்து......
வலிகளை சுமந்து.....
இன்பமான துன்பத்தில்......
இதயங்கள் வாழ்ந்தாலும்.....
புரியாத உணர்வு.....
.jpg)
மறையாத கனவு.....
களையாத நினைவு......
காயாத காயம் ......
என்று .............................
நான்கு சுவர்களில்
நித்தம் உந்தன்
நினைவுகளால் துன்பம்
பிரிந்தும் பிரியாது
புரிந்தும் புரியாது
உந்தன் நினைவுகள்
பூக்கும் பொழுதுகளில்
நிலவில் உன் முகம் பார்த்து
நகரும் நரக வாழ்க்கையில்
இடை இடையே
காத்திருப்பேன் என்ற
உன் வார்த்தைகள் -என்னை
உச்சாக படுத்துதே அன்பே
Subscribe to:
Posts (Atom)