கற்பிழந்தவள் நான்
கவிதைக்கு சொந்தக்காரி. . !
பொய்க்காதல் புலவனே. . !
காரணமில்லாமல் வந்தாய்
காந்த வார்த்தைகள் கோர்த்து. . !
கண்டவுடன் கொண்டாய்
காதல் ஒன்றை. . !
.jpg)
எப்பொழுதும்
நினைத்திருந்தேன். . !
முழு காதலில்
மூழ்கி முட்டாள் ஆனவள்
நான்தானே. . !
நல்லவன் நீயடா என்று
நினைத்துதானே
விட்டுக்கொடுத்தேன்
என்னை
தொட்டுக்கொள்ளடா என்று. . !
தப்பானதே தவறுதலாக. . !
இரவிலே பிறந்துகிடந்தேன். . !
இராட்சச ரசிகா
நம்மை மறந்துகிடந்தேன். . !
என்னையோ மறந்து சென்றாய்
எங்கோ மறைந்து கொண்டு. . !
விடிந்தவுடன் கள்வன்
ஆனாயடா
நீ. . !
என்னருகில் மட்டும்
பணமிருந்திருந்தால்
என்ன பெயரோ
எனக்கென்ன பெயரோ. . ?
நல்லவேளை
இன்றும் நான்
கற்பிழந்தவள்தான். . ! ♥ ♥ ♥ ♥ ♥ ♥
No comments:
Post a Comment