Tuesday, July 3, 2012

என்னை பிரிந்து செல்லாதே !


என்னை பிரிந்து செல்லாதே
என் இதயம் கொத்திய
கொக்கே
நீ
எத்தனை நாள்
காத்திருந்தாய்
இதற்கு?


உனது கண்களினால்
என்னை
விண்வெளியேற்றி
ஆராய்ச்சி செய்ய
வைத்தாய்
காதல் பற்றி!


நீயேன்
வியர்வை சிந்துகிறாய் ?
பூக்களிலிருந்து பனித்துளி
விழுவது போலவேயிருக்கிறது
எனக்கு!


உன்
கூந்தலை ஏன் பறக்க விட்டு
செல்கிறாய்
காற்றில்?
பூக்கள் போராட்டம்
நடத்தும்
உன் கூந்தல் வாசனையை தடை செய்யென!


உனது
இடையே தான் பூமியின்
கடையளவு !


உதடுகளை
எச்சில் கொண்டு நனைக்காதே
சூரிய வெளிச்சத்தில்
தங்கம் மின்னுவதாகி விடும் !


நீ
நடந்து செல் பரவாயில்லை
ஊர்ந்து செல்லும் உயிரினமாவது
பூமியிலிருந்து கொண்டே
சொர்க்கம் காணட்டும்
உன் பட்டு பாதம் பட்டு !


நீ
ஒரு கணம்
சிரித்து விட்டு
செல்
வருடம் பல கடந்தும்
பாலைவனங்கள்
நீரூற்றாக கிடக்கும் !


நான் தான் கவிஞன்
ஆகிற்றே
இப்படியே
மையூற்றி எழுதும்
பேனாவில்
பொய்யூற்றி எழுதுகிறேன்
என்னை பிரிந்து செல்லாதே ! அம்மு குட்டி




No comments:

Post a Comment