ஆயுதம் கைதனில் ஏந்தவில்லை
துளி இரத்தம் கூட சிந்தவில்லை
ஆனாலும் யுத்தம் மட்டும் நேர்கிறது
இந்த காதலால் எனதுள்ளத்தில்...........!
கொஞ்சம் கொஞ்சமாய்
என் உயிர் துடிக்க
இதமான வீணை
என் இதயத்தில் மீட்ட
மொத்தமாய் இழந்திட்டேன்
உன்னிடத்தில் என்னை...........!
மாயம் ஏதும் நேரவில்லை
நீ மந்திரமும் போடவில்லை
உன் கண்கள் செய்யும் வித்தையினால்
கரைந்து போனேன் உன்னிடத்தில் .......!
எட்டத்தில் நீயுமில்லை
எட்டா நிலவாய் -நான்
உன்னை நினைக்கவுமில்லை
எண்ணமிடும் நொடிதனிலே
என்னதருகில் நீ இருக்கிறாய்........!
இனிய குணம்
இதமான பேச்சு
கொஞ்சம் குறும்பு
செல்ல கோபம்
எத்தனை எத்தனையடா உன்னிடத்தே
அன்னை ஊட்டிய பால் போல்
அத்தனையும் கலந்து போனதடா
எந்தன் உதிரம் தன்னிலே.......!
மழை போல் என்னுள்
துளியென விழுந்த நீ
இன்றோ வெள்ளமென மாறி
என் நெஞ்சில் கரை புரண்டு ஓடுகின்றாய் ....!
இராத்திரி நிலவும்
குளிர் வாடை காற்றும்
நீண்ட நேர நிசப்தமும்
என்னை நிதமும் இமிசிக்கிறது
உந்தன் அருகாமையை எதிர்பார்த்து ..........!
கனிந்திட்ட காதல் சொல்ல
இந்த கன்னியிடம் வார்த்தை இல்லை
கவிதையால் காதல் சொல்ல
இந்த பேதைக்கு தெரியவில்லை
கண்ணீரால் ஓர் நொடியில்
காதல் சொல்கிறேன்
உற்று நோக்கடா
ஓர் நொடி எந்தன் விழிகளை .....!
No comments:
Post a Comment