நானும் நீயும் ஒரே அழைப்பொலி
வைத்து இருப்பது அறியாமல்
யாருடைய கைபேசியிலோ அழைப்பு
வந்த போது நாம் இருவருமே அவரவர்
கைபேசியை எடுத்துப்பார்த்து விட்டு
நீ என்னையும்
... நான் உன்னையும்
பார்த்து வழிந்தோமே ?
அந்த முதல் சந்திப்பு உனக்கு
ஞாபகம் இருக்கிறதா ?
தோழிக்கு சொல்வது போல்
உன் கைபேசி எண்ணை
உரக்கச்சொல்லியது எனக்காகத்
தானே என நான் பிறிதொருநாள்
கேட்ட போது நீ அவசரமாக முறைத்து
மறுத்து விட்டு
அப்படி போவதற்குள்
ஆமாம் என குறுந்தகவல் அனுப்பினாயே
ஞாபகம் இருக்கிறதா?
முதன் முதலில் நான்
உன்னை கைபேசியில் அழைத்த போது
யாரென்றே தெரியாதது போல
ஆயிரம் கேள்வி கேட்டு
வெறுப்பேற்றினாயே
ஞாபகம் இருக்கிறதா ?
அண்ணன் பக்கத்தில்
இருந்ததால் தான் அப்படி
பேச வேண்டி இருந்தது மன்னித்துக்கொள்
என நீ அனுப்பிக்கொண்டே
இருந்த குறுந்தகவல்கள்
என் குறுந்தகவல் சேமிப்பியையே
நிரப்பி விட்டது உனக்கு
தெரியுமா ?
ஏண்டா வாய் அசையுது
ஆனா ஒரு சத்தமும் கேட்க மாட்டீங்குதேடா
குசுகுசுன்னு அப்படி
என்ன தான் ரகசியம் பேசுறியோ ?
என கேட்கும் அம்மாவிடம்
சொல்லி விடட்டுமா
அந்த ரகசியத்தை என நான்
உன்னிடம் கேட்ட போது
.jpg)
என குறும்பாக நீ சொன்னது
ஞாபகம் இருக்கிறதா ?
அவசரத்தில் நீ கைபேசியை வைத்து
இருந்த இடத்தைப்பார்த்து விட்டு
ஒரேயொரு நாள் நான் உன்
கைபேசியாக இருக்கிறேனே
என நான் கேட்ட போது
நீ கொட்டிய வெட்கத்தை
என் மனதினில் இன்னமும்
சேமித்து வைத்திருக்கிறேன்
தெரியுமா ?
ஏன் இன்னும் இந்த பழைய
கைபேசியையே வைத்துக்கொண்டு
மாரடிக்கிறே என கேலி பேசும்
நண்பர்களிடம் இது தான்
நீ முதன் முதலில் கொடுத்த
முத்தம் சுமந்த கைபேசி
என கூற முடியுமா ?
இப்போவெல்லாம் நம்ம பையன்
நைட்டு ரொம்ப நேரம் படிச்சுட்டு
லேட்டா தான் தூங்குறான் என
அப்பாவிடம் உற்சாகமாக
சொல்லிக்கொண்டிருக்கும்
அம்மாவுக்கு தெரியுமா
நான் படித்துக்கொண்டிருப்பது மாதிரி
நடித்துக்கொண்டிருப்பதே
நாம் அனுப்பிக்கொள்ளும்
குறுந்தகவல்களுக்ககாகத்தான் என்று ?
என் தோழியிடமிருந்து வந்திருந்த
ஒரு குறுந்தகவலை நீ படித்து விட்டு
என்னிடம் சண்டையிட்டு போன
அன்று முழுவதும் நான் உனக்கு
விளக்கம் சொல்லி சொல்லி
தேய்ந்தே போனது என்
கைபேசியின் விசைப்பலகை
மட்டும் அல்ல
என் விரல்களும் தான்
என உனக்குத்தெரியுமா ?
நண்பர்களுடன் இருக்கும் போது
நீ கேட்ட முத்தத்தை நான் தரவில்லை
என கோபமாக நீ கைபேசியை அணைத்து விட்டு
சென்று விட்டாய் என்பதற்காக அடுத்த நாள்
முழுவதும் கைபேசியில்
நான் முத்தம் கொடுத்துக்கொண்டே
இருக்க தாங்க முடியாமல்
‘போதுண்டா பேசித்தொலைக்கிறேன்
நிறுத்து ப்ளீஸ்!’ என நீ கெஞ்சலாக
கேட்ட கொஞ்சலை
உனக்கு ஞாபகம் இருக்கிறதா ?
காதலில் விழுந்த பின்
என் கைபேசி படும்பாடு
சொல்லி மாளாதடி
என் செல்லமே !
No comments:
Post a Comment