Thursday, June 14, 2012
வந்து உணர்வை கொடு. . !
ஊரெல்லாம் அடங்க என்
உணர்வுகளோ விழிக்க
நான் மட்டும் தனிமையில். . !
நள்ளிரவின் துணையினில். . !
நீ விட்ட எச்சங்களை
நான் மீட்டி வாழ்கின்றேன். . !
என் மனத்தின் அதிர்வுகளை
என் விரல் வழி அசைக்கின்றேன். . !
நான் அசைக்கும் இசையினால் தான்
நானே வாழ்கின்றேன். . !
அசைகின்ற காற்றே. . !
என் அதிர்வுகளையும் எடுத்து செல்லு. . !
நீ போகும் வழிகளிலே
என் நினைவுகளையும் தூவிச்செல்லு. . !
தூவிச்செல்லும் இடங்களிலே
என் துணை இருந்து விட்டால். . !
தூங்காது மீட்டுகின்றாள் என்று
தூது கொஞ்சம் சொல்லி விடு. . !
ஏங்காது இறுகி விட்டாள் என்று
என் நிலையை சொல்லி விடு. . !
வாழ்கின்றாள் உயிரோடு
வந்து உணர்வை கொடுக்க சொல்லு. . !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment