Thursday, June 14, 2012

வந்து உணர்வை கொடு. . !


ஊரெல்லாம் அடங்க என்
உணர்வுகளோ விழிக்க
நான் மட்டும் தனிமையில். . !
நள்ளிரவின் துணையினில். . !
நீ விட்ட எச்சங்களை
நான் மீட்டி வாழ்கின்றேன். . !
என் மனத்தின் அதிர்வுகளை
என் விரல் வழி அசைக்கின்றேன். . !
நான் அசைக்கும் இசையினால் தான்
நானே வாழ்கின்றேன். . !
அசைகின்ற காற்றே. . !
என் அதிர்வுகளையும் எடுத்து செல்லு. . !
நீ போகும் வழிகளிலே
என் நினைவுகளையும் தூவிச்செல்லு. . !
தூவிச்செல்லும் இடங்களிலே
என் துணை இருந்து விட்டால். . !
தூங்காது மீட்டுகின்றாள் என்று
தூது கொஞ்சம் சொல்லி விடு. . !
ஏங்காது இறுகி விட்டாள் என்று
என் நிலையை சொல்லி விடு. . !
வாழ்கின்றாள் உயிரோடு
வந்து உணர்வை கொடுக்க சொல்லு. . !


Tuesday, June 12, 2012

என்னை விட்டு சென்றாய்




ஒரு நாளும் புரியாது
விண்மீன்கள் வட்டமிட்டு
சிரிக்கின்றன...


தெருவிளக்குகள்
எல்லாம் அறிவுரை
கூறிய வண்ணமாய்
இருந்தன...


தனிமையோ
என்னை பார்த்து
ஏளனமாய் இகழ்கின்றன...


கூடி இருக்கும்
கும்பல் கூத்தாடி
குமாளம் இட்டன...


காரணம்....


நீ
என்னை விட்டு
சென்றாய்
என்று நினைத்து....


அவர்களுக்கு
தெரியாது
நீ
என்னை விட்டு
செல்லவில்லை


என் காதலை
பற்றி எனக்கு
முழுதாய்
புரியவைத்தாய் என்பதை.........!





ஆறிய காயங்கள்...! ஆறாத வடுக்கள்...!


காதலியே...
நீ தந்த முத்தமும்...
அணைப்பு சுகமும்...
வெளிச்சத்தில்
மறந்திருந்தாலும்...
இருட்டுக்குத் தெரியும்
நம் அந்தரங்கம்..!


வாங்கித் தந்த பூக்கள்
வாடிப் போனாலும்...
வாசனைக்குத் தெரியும்
நாம் பூத்திருந்த காலம்..!


நனைத்துவிட்ட மழையை
கோடை மறக்கச் செய்தாலும்...
ஒதுங்கிய கோவிலின்
வாயிலுக்குத் தெரியும்
நாம் நனைந்த நாட்கள்..!


திரையரங்குகளில்
படங்கள் மாறியிருந்தாலும்...
நாற்காலிகளுக்குத் தெரியும்
நாம் மெய் மறந்த நேரங்கள்..!


அரங்கத்தில் வந்து விட்ட
நம் காதலும்...
நான் இன்றி நடந்த
உன் மணவாழ்க்கை துவக்கமும்
உன் மரணமும்...


நொறுங்கிப்போன என் இதயமும்
காலம் காயத்தை ஆற்றியது..!
ஆனால் வடுக்கள்...


இனி யாரிடமும் காட்டி...
பெருமைபட்டுக் கொள்ள
முடியாது என்றாலும்...
நீ கொடுத்த ஒற்றை ரோஜா...
காய்ந்து கசங்கி...
என்னிடம் பத்திரமாய்
ரகசியமாய்...
வலிக்கின்றன அதன் ரணங்கள்..!
ஊருக்குத் தெரியாதிருந்தாலும்
உள்ளுக்குள் அழுகை இருக்கும்..!



ஆண்டவன் விதித்த விதியோ !


இனியும் ஒரு ஜன்மம் வேண்டும் என் காதலியுடன் சேர்ந்து வாழ !
என் உலகமே ! உன்னை உயிருக்கு உயிராக காதலித்தேனே !
சுவாசிக்காமல் கூட இருந்தேன் !
சுவாசம் கொடுக்க நீ இருப்பாய் என்ற நம்பிக்கையில் !
கண்ணில் தூசு விழுந்தால் கூட கண்ணை கசகுவதில்லை !
கண்ணில் உன் பிம்பம் இருந்ததினால் !
ஏங்கி ஏங்கி தவித்தேன் நீ என்னுடன் பேசும்
அன்பான வார்த்தைகளுக்காக !
பெரிய சோகங்களும் தவிடு பொடியானது !
அன்பே சோகத்திற்கு மருந்தாய் நீ இருந்ததால் !
ஆனால் ஏனடி மறுத்தாய் ?
நீ என் காதலை மறுத்ததை ஏற்று கொண்ட என் இதயம் !
உண்மையில் ஏற்று கொள்ளவில்லை !!
இன்னொருவன் காதலை உன்னிடம் சொன்னதும் ...
நீ ஏற்று கொண்டதை ...............................................
உண்மையில் என் உயிர் துடித்து கொண்டிருக்கும்
உன் இதயத்தில் கை வைத்து சொல் !
என்னை போல் உன்னை நேசித்தவர் எவருமுண்டோ !
தாங்கமுடியவில்லை
என் உதடுகள் பேசிய அன்பான வார்த்தைகளை கேட்ட
உன் காதுகள் !!!!
இனிமேல் அவன் பேசுவதை மட்டும் கேட்கும் வேதனையே !
எனக்கு மட்டும் சொந்தமான உன் அங்கங்கள் ! அய்யோ !
எப்படி சொல்வது ! யாரிடம் சொல்லி முறையிடுவது !
அரபி கடலும் ஒப்பாரி வைக்கிறது !
என் அழுகையின் ஆழத்தை தாங்க முடியாமல் !
இவை அனைத்தும் காலம் கடந்து காதலை
சொன்னதால் வந்த வினையோ !
இல்லை உன் நினைவுகளுடன் மட்டும் நான் வாழ
ஆண்டவன் விதித்த விதியோ !
உண்மையில் இதுவரை என் அன்பின் ஆழத்தை
நீ புரிந்து கொள்ளவில்லையா !
நீ இருந்த என் இதயத்தில் எவரேனும் வந்தால் !
துரத்தி அடிக்கின்றன உன் நினைவுகள் !
உன் நினைவுகளுக்கு பிடித்த என்னை !
ஏன் உனக்கு மட்டும் பிடிக்கவில்லை !
உன் மனதில் என்னக்கு இம்மியளவு கூட
இடமில்லை என்பது எனக்கு தெரியும் !
இருந்தாலும்
என்னை விட்டு இம்மியளவும் நீங்காமல்
நீ இருப்பாய் !
தயவு செய்து என்னை காதலில் தோற்றவன்
என்று மட்டும் சொல்லி விடாதீர்கள் !
எனக்கு இனியும் ஒரு ஜன்மம் வேண்டும்
என் காதலியுடன் சேர்ந்து வாழ !


Monday, June 11, 2012

உன் கண்ணீரை ஏந்தினால்

உன்னை நினைக்க மறந்த
இரவொன்றில் நிலவின் துணை
கொண்டு எழுதிய கவிதை இது


தயவு செய்து வாசித்து விடாதே
உன் கண்ணீரை ஏந்தினால் என்
கவிதை இறந்து விடும்


காலங்கள் கரைந்தாலும் கரை
சேராத நதியாய் தேங்கிய படியே
கிடக்கிறது என் காதல் உன்னால்


காதல் எனும் வானத்தில் நாமிருவரும்
பறந்து திரிந்த காலங்களை எண்ணிய படியே
சிறகுகள் இன்றி தனிமரமாய் இன்று நான்


என் காதல் உன்னை மட்டும் காதலிக்க
கற்றுத்தரவில்லை உன்னைத்தவிர யாரையும்
காதலிக்ககூடாது என்பதையும் தான் கற்றுத்தந்தது


உன் இரவுகளின் தாலாட்டு எது என்பதை
நானறியேன் ஆனால் என் ஒவ்வொரு
விடியலின் ஓசையும் என் கவிக்குழந்தையின்
அழுகுரல் தான்


உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை நீ
என்னோடு இருந்த போது ஒவ்வொரு நாளும்
புதுப்பக்கங்களாய் இருந்தது என் வாழ்க்கை என்று


நீ மறந்திருக்கக்கூடும் நான் உன் இதயத்தை
காதலால் தான் வாங்கிக்கொண்டேன் என்பதை
ஆனால் நான் மறக்கவில்லை நீ வார்த்தைகள்
எனும் அடியாட்களைக்கொண்டு என்னை
அகதியாய் விரட்டி அடித்ததை


என்றோ ஓர் நாள் யாரோ ஒருவனுக்கு
சொந்தமாகப்போகும் உன் இதயத்தில்
சில மாதங்கள் வாழ்ந்ததில் சந்தோசப்படாலும்


உன் இதயத்தில் தொடர்ந்து வாழ
வாய்ப்பில்லாமல் போனதை விட
உன் இதயத்தில் நான் இறக்காமல்
போனதில் கவலை தான் எனக்கு


உன்னால் என் தனிமைக்கு மிஞ்சியிருப்பது
என் பேனா மட்டும் தான் பாவம் அது நான்
அழுதால் உடனே அழ அரம்பிக்கிறது இருவரில்
யார் அழுதாலும் உன்னால் குறையப்போவது
எங்கள் அயுள் தானே


பாவப்பட்டவனின் கைக்கு விலை போன
பேனா படாதபாடுபடத்தானே வேண்டும்


இன்று என்னை விட என் பேனா அதிகமாக
அழுகிறது பாவம் நான் எனக்கிருக்கும்
உறவை அழ விட்டு விட்டு என்ன செய்யப்
போகிறேன் எனவே உனக்கு சொல்ல
வந்ததை சொல்லி விடுகிறேன்


இறந்து போன என் காதலை
எரிக்க மனமின்றி என்னைக்
கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய்
எரித்து வருகிறேன்


முடிந்தால் நான் இறந்த மூன்றாம் நாள்
வா காதல் சாம்பலோடு என்னை சேர்த்து
அள்ளலாம்






இதயம் வலிக்கிறது..

என் வழ்வை புதுபிக்கும்
வழிதேடி வெகுதுரம் நடந்து விட்டேன்.
அச்சமயம் ஒரு நாள்.


இணையத்தில்..
நான் எதிர்பார்த்து..
எதிர்பாராமல் கிடைத்த உன் புகைப்படம்..
பார்த்தவுடன்..
நான் இதுவரை அறியாத ஒரு உணர்வு..
சந்தோஷமல்ல..
துக்கமல்ல..
அழுகையல்ல..
ம்..


அட..
எவ்வளவு அழகாய்..
சிரித்து கொண்டிருக்கிறாய்??
சந்தோஷமாய் இருக்கிறாய்..
ஆச்சரியமாய் இருக்கிறது..!
உனக்கு என் பற்றிய நினைவுகளே
வருவதில்லையா..?
இல்லை
வரும்..
வராமல் இருக்காது..
நீ நிச்சயம் நினைப்பாய்…
அதெப்படி நினைக்காமல் இருப்பாய்..??
ஒரு நாளில்..ஒரு நாளிகயாவது நினைத்திருப்பாய்..
சமாதானம் செய்து கொள்கிறேன்..
என்னை நானே…
நான் தான் உன்னை நினைத்து புலம்பி கொண்டிருக்கிறேன்..
நீ?
அது சரி..
உன்னில் பிழையொன்றுமில்லை..
நீ என்னை காதலித்தாய்..
நான் அறிவேன்..
நான் உன்னை காதலித்தேன்..
நீ அறிய மாட்டாய்..
உன்னை பொறுத்த வரையில்..
நான் முடிந்து போன காதல்..
என்னை பொறுத்த வரையில்..
நீ..
தெரியவில்லை..
உன்னை காதலித்து கரம் பிடிப்பதற்கு
எனக்கு மட்டும் ஆசையில்லையா என்ன??
‘நாம் ஆசைப்பட்டது அனைத்தும் கிடைக்காது’ என்பது..
உன் விசயத்தில் ..
சரியாகத்தான் இருக்கிறது…
என்னுள் புதைந்து கிடக்கும்..
எண்ண அலைகளை அறிவாயா..
இந்த அலைகள் உன்னை நிட்சயம்
வந்து தாக்கும்..
ம்ம்..
மீண்டும் இன்னுமொரு சமாதானம்..


இனி நாம் பார்க்க போவதில்லை..
ம்ம்..
பிறகு ஏன்??
அர்த்தமிலா பல கேள்விகள்..
என்னை நானே கேட்டு கொண்டிருக்கிறேன்..
உன்னைப்பாரத்தவாறே..


விழிகள் கனக்கின்றது…
கண்ணீர் வழிகிறது..
இதயம் வலிக்கிறது..
உன் நினைவுகள்..
என்னுள் ஒரு..
பிரளயத்தையே ஏற்படுத்துகிறது..
இவை எதையுமே அறியாமல்..


நீ மட்டும்..


இன்னும்…
சிரித்து கொண்டே இருக்கிறாய்..


உன் நினைவுகளில்..


அன்பே ....
என் அருகில் நீ இல்லாத போது...
உன் நினைவுகளில்...
என் கண்கள்...
கண்ணீரை வடித்தது....
என் பேனாவோ...
கவிதைகளாய் வடித்தது...


இன்றும் ..
வாழ்கிறது ..
உன் நினைவுகள்...
என் பேனாவின் கண்ணீராய் ...


கண்மணியே காதல் என்றால்
உயிர் என்றாய்
காதலுக்காய் கண்ணீர் சிந்தி
தினமும் கற்பனையில்..
கவி வடித்தாய் ....


உன் வரிகளை
நேசித்ததற்காக ..
ஏன் அந்த வலிகளை
நிஜமாகவே
எனக்கு கொடுத்தாய்


ஓர் இதயம் நேசிப்பதை ....
சில சமயம் மற்ற இதயமும் ...
நேசிப்பதில்லை ...
இரு இதயமும் நேசிப்பதை ...
சில சமயம் இறைவன் கூட....
நேசிப்பதில்லை ...



உண்மையும் போலியும்!!!


என் காதல் சொன்னதும்
கொஞ்ச நேரம் கேட்டாய்
என்னை பிடிக்கும் என்று
சொல்லத்தான் என்று நினைத்தேன்
பிடிக்கவில்லை என்று சொல்வதற்கு தகுந்த காரணம் தான்
இத்தனை நாளும் தேடிக்கொண்டிருந்தாய் என்று
இன்று தான் தெரிய வந்தது
கோட்டை கட்டி
கூட்டம் கூட்டி
குடி புகலாம் என்ற பொழுது
நண்பராகி விடலாம் என்று சொல்லி
நழுவப்பார்க்கிறாய்
என் கல்லூரி வாழ்க்கையும்
நான்கு வருடங்களும்
கழிந்த பின்பு
சிரித்துப்பேசிய நீ
சீரியஷ் ஆகிறாய்
வீடு வாகனம் சொத்து என்று
பட்டியல் நீட்டுகிறாய்
இதுவரை நாளும்
ஃப்ரீ(free) ரீலோட்டுக்கும்
கெண்டீனின் பில்லுக்கும் தானா
என்னை சமத்து என்றாய்???
என் காதல் ஒன்றே போதும்
என்று சத்தியம் செய்து சொன்னவளா நீ


அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும்
உன் பெற்றோர் உனக்கு வரம் பார்க்கையில்
ஆல்ஃபபெட் (Alphabet) தெரியாதவன் என்று 
நீயும் கேலியாய்ப்பார்க்கிறாய்
ஹ்ம்ம்ம்
உமக்கென்ன...ஊர் சுற்றி உலா வரவும்
ஓசீயிலேயே காலம் கடத்தவும்
என்னைப்போல் யாரேனும் கோமாளிகள் தானே தேவை...


பெற்றோரின் வார்த்தைகளுக்கு கட்டுப்படும்
உத்தமிகள் போலல்லவா பேத்திக்கொள்கிறீர்கள்
ஆண்களை நீங்கள் முட்டாலென்று உங்களுக்குள் அல்லவா பேசிக்கொள்கிறீர்கள்
ஆம் நாங்கள் முட்டால்கள் தான்
ஆதலால் தானே வேண்டிய பக்கமெல்லாம் எம்மை வளைக்கிறீர்கள்
சாவிக்கோவை போல இடுப்பில் சொறுகிறீர்கள்


ஆனால் உத்தமர்களும் கூட
அது பற்றித்தானே நீங்கள் அலட்டிக்கொள்வதில்லை
பரவாயில்லை
கண்ணிப்பெண்களின் சாபங்கள்தான் பலிக்குமென்று கதையுண்டு
கண்ணி ஆண்கள் எப்போதேனும் பலித்த கதை கேட்டதுண்டோ
எங்கள் சாபங்களும் பலிக்கும் ஆனால்
எங்களுக்கு சபதங்களே பிடிக்கும்


என்னை ஏமாற்றியதாய் நீ நினைக்கிறாய்
இல்லை என்னைக்காப்பாற்றினாய் என்று நான் நினைக்கிறேன்
நம்பிக்கைத் நம்பிக்கைத்துரோகம் உனக்கு சகஜமாய் விட்டது
அதன் வலிகள் எனக்கு பலம் தந்து விட்டன
சுதாகரித்துக்கொண்டேன்


உத்தமர்கள் இருக்கையில் உத்தமிகளும் இருப்பார்கள்
குற்றத்திற்கு தண்டனையும்
நற்செயலுக்கு சன்மானமும் நிச்சயமாக கிடைக்கும்


எங்கேனும் நாம் சந்தித்துக்கொண்டால் அன்று தான் நிலவரம் புரியும்
சடப்பொருட்களில் நம்பிக்கை வைத்த நீயும்
உண்மையில் திடம் கொண்ட நானும்
நிறுத்துப்பார்க்கலாம்...
நிஜம் உனக்குப்புரியாலாம்...
அது வரை நான்...
கடற்கரைகளில் சுகமாக காற்று வாங்குவேன்
கடைத்தெருக்களில் சுதந்திரமாக நடமாடுவேன்
தேவதை வாசம் தேடி
பேதை தரிசனம் வேண்டி



உன் கண்ணீரையாவது சிந்தி விட்டு போ!

என் வாழ்க்கை
பக்கங்களுக்கு
பற்றாக்குறை


அதில்
உன் நினைவுகளை
எழுத வேண்டுமென்று நினைத்ததால்.


முதல் பக்கத்தில்
எழுதப்போவதென்னவோ
நான் தான்.


உன்னை
முதன் முதலில்
பார்த்த நாளை
என் மூன்றாம்
பக்கத்தில் எழுதுகிறேன்.


முதல் இரண்டு பக்கங்கள்
நான் கண்ட
கனவுகளில்
வந்த உன்
உருவங்களை பற்றி
எழுதுவதற்க்காக!


என் இறுதி பக்கங்களில்
முடிக்கபடாமலே
போய் விட்டன.


நீ என்னை பிரிந்ததால்
மட்டுமல்ல.
என் உயிரும்
என்னை பிரிந்ததால்.


உன் கண்ணீரையாவது
சிந்தி விட்டு போ....
என்
இறுதி பக்கங்களுக்காக.....


அழகான வீட்டில்
அளவான குடும்பம்
பாசம் காட்ட இரு குழந்தை
அன்பான மனைவியாய்
ஆயுள் முழுதும் நீ!


இவையனைத்தும் கிடைக்குமென்றே
நித்தம் மகிழ்ந்திருந்தோம்.


புத்தம் புது வாழ்க்கைக்காக
நம் கனவுகளை
கனவென்றே எண்ணி
பிரிந்து விட்டாய்


என்னுயிர்
காதலியே!







காதலில் தோற்றால்.....


காதல் என்னும்
காட்டில் குளத்தில் தண்ணீர் குடிக்க சென்றேன்
அங்கு குளம் என்னை பார்த்து
சொன்னது

நீ
காதலிக்கும் தண்ணீர்
குடிக்கிறாய்
அதனால் உன் முகம்
மட்டும் தண்ணீரில்
மிதக்குது
ஒருவேளை நீ காதலில்
தோற்று விட்டால்
உன் உடம்பும் தண்ணீரில்
மிதக்கும்

பின்பு
பூ பறிக்க சென்றேன்
பூ என்னை பார்த்து
சொன்னது
நீ காதலிக்கும் போது
என்னை பறிக்கிறாய்
அதனால்
என்னை நீ
தாங்குகிறாய்
நீ காதலில் தோற்றால்
உன்னை நான்
தாங்குவேன் கல்லறையில் !

நான் தனிமையில்
சென்றேன்
தனிமையும் என்னிடம்
பேசியது
காதலிக்கும் போது
தனிமையும் சுகமாகத்தான்
இருக்கும்
காதலில் தோற்றால்
இனிமை கூட
தனிமையாக மாறும் !

Sunday, June 3, 2012

தனிமை

தொலைத்தலும் இழத்தலும்
கவலையும் சந்தோசமும்
என் வாழ்வின் வழமையான ஒன்று
எல்லாம் இருந்தும்


எதுவுமே இல்லாதவளாய்
வெறுமையாய் என்னையே நான் வெறுத்து
நின்ற வேளை விழிகளுக்கு ஒளி தந்து
இருளை அகற்றியவனும் நீ தான்


தலை நிமிர்ந்து வாழு
உனக்காக நான் இருப்பேன்
என்றவனும் நீ தான்


அன்புக்கு இலக்கணம் சொன்னவனும்
நீயே அதனாலேயே என் பயணம்
தொடர்ந்து சென்றது உன் பின்னால்


உன்னை நம்பி நானிருந்தேன் ஆனால்
நீயோ ஒரு நொடிப்பொழுதில்
என்னை கலங்க வைத்தது ஏனோ?
ஓரக்கண்ணின் கசிவைத்தவிர


மெளனித்தவளாய் நானானேன் இன்று


வாழ்வில் எதுவும் நிரந்திரமல்ல என்று
அழகாய் பதிய வைத்து சென்றாய்
யாரோ ஒருவருக்காக என் அன்பை


எப்படி உன்னால் விலை பேச முடிந்தது
பூஜித்தபடி நான் இப்போ வெறித்த
மனதுடன் கால்கள் மட்டும்
தனியே நடை போடுகிறது


என்றும் என் வாழ்வின் உற்ற துணை
தனிமை மட்டும் தான் ....
தனிமை கொடுமையாக தான் இருக்கிறது
என் வாழ்வு நிரந்திரமற்றது


அதில் நீயும் நிரந்திரமற்றவன் - இருந்தும்
என் மனம் சொல்கிறது
முதலும் முடிவும் நீதான் என்று...





புரியவில்லையடி


புரியவில்லையடி அன்பே...
நீ நடத்தும் நாடகங்கள்
ஒவ்வொன்றும் !!!


மறந்து விட்டேன் உன்னை.....
என்று தான் சொல்ல நினைக்கிறன் ????
ஆனால் சொல்லி முடிக்கும்
மறுகணம் நினைவில் நீ!!!


பிரிந்து விட்ட பின்னும்
உன் பெயர் படித்தால்
உள்ளம் புல்லரிப்பது என்னவோ
உண்மை தான் அன்பே..


இந்த முறை உன் பிரிவு
என்னை ஸ்தம்பிக்க செய்யவில்லை.....
காரணம் நீ என்னுள்
விட்டு சென்ற ரணங்கள்!!!..


போகும் போக்கில் புரியவைத்து
விட்டாய் வாழ்வு பொய் என்று!!!


இனி சேர்ந்து வாழும் விருப்பம் இல்லை..
ஆனால் உன்னை தவிர ஒருவருக்கும்
என் வாழ்வில் இடமுமில்லை!!!


அன்பே...!!!!
இறுதிவரை உன்னுடன் இருக்க
விரும்பினேன்.....
நீயோ பாதியிலேயே விட்டு
சென்று விட்டாய்...


உன்னிடம் நன் யாசிப்பது ஒன்று தான்.......
உன் வாழ்வில் என்றேனும்
ஒருகணம் என்னை பார்க்க நேர்ந்தால்???
உன் புன்னகையை உதிர்த்து
விட்டு செல் அன்பே..


முகத்தை திருப்பிக்கொண்டு
மட்டும் போய் விடாதே!!!...