ஒரு நாளும் புரியாது
விண்மீன்கள் வட்டமிட்டு
சிரிக்கின்றன...
தெருவிளக்குகள்
எல்லாம் அறிவுரை
கூறிய வண்ணமாய்
இருந்தன...
தனிமையோ
என்னை பார்த்து
ஏளனமாய் இகழ்கின்றன...
கூடி இருக்கும்
கும்பல் கூத்தாடி
குமாளம் இட்டன...
காரணம்....
நீ
என்னை விட்டு
சென்றாய்
என்று நினைத்து....
அவர்களுக்கு
தெரியாது
நீ
என்னை விட்டு
செல்லவில்லை
என் காதலை
பற்றி எனக்கு
முழுதாய்
புரியவைத்தாய் என்பதை.........!
No comments:
Post a Comment