Monday, June 11, 2012
உண்மையும் போலியும்!!!
என் காதல் சொன்னதும்
கொஞ்ச நேரம் கேட்டாய்
என்னை பிடிக்கும் என்று
சொல்லத்தான் என்று நினைத்தேன்
பிடிக்கவில்லை என்று சொல்வதற்கு தகுந்த காரணம் தான்
இத்தனை நாளும் தேடிக்கொண்டிருந்தாய் என்று
இன்று தான் தெரிய வந்தது
கோட்டை கட்டி
கூட்டம் கூட்டி
குடி புகலாம் என்ற பொழுது
நண்பராகி விடலாம் என்று சொல்லி
நழுவப்பார்க்கிறாய்
என் கல்லூரி வாழ்க்கையும்
நான்கு வருடங்களும்
கழிந்த பின்பு
சிரித்துப்பேசிய நீ
சீரியஷ் ஆகிறாய்
வீடு வாகனம் சொத்து என்று
பட்டியல் நீட்டுகிறாய்
இதுவரை நாளும்
ஃப்ரீ(free) ரீலோட்டுக்கும்
கெண்டீனின் பில்லுக்கும் தானா
என்னை சமத்து என்றாய்???
என் காதல் ஒன்றே போதும்
என்று சத்தியம் செய்து சொன்னவளா நீ
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும்
உன் பெற்றோர் உனக்கு வரம் பார்க்கையில்
ஆல்ஃபபெட் (Alphabet) தெரியாதவன் என்று
நீயும் கேலியாய்ப்பார்க்கிறாய்
ஹ்ம்ம்ம்
உமக்கென்ன...ஊர் சுற்றி உலா வரவும்
ஓசீயிலேயே காலம் கடத்தவும்
என்னைப்போல் யாரேனும் கோமாளிகள் தானே தேவை...
பெற்றோரின் வார்த்தைகளுக்கு கட்டுப்படும்
உத்தமிகள் போலல்லவா பேத்திக்கொள்கிறீர்கள்
ஆண்களை நீங்கள் முட்டாலென்று உங்களுக்குள் அல்லவா பேசிக்கொள்கிறீர்கள்
ஆம் நாங்கள் முட்டால்கள் தான்
ஆதலால் தானே வேண்டிய பக்கமெல்லாம் எம்மை வளைக்கிறீர்கள்
சாவிக்கோவை போல இடுப்பில் சொறுகிறீர்கள்
ஆனால் உத்தமர்களும் கூட
அது பற்றித்தானே நீங்கள் அலட்டிக்கொள்வதில்லை
பரவாயில்லை
கண்ணிப்பெண்களின் சாபங்கள்தான் பலிக்குமென்று கதையுண்டு
கண்ணி ஆண்கள் எப்போதேனும் பலித்த கதை கேட்டதுண்டோ
எங்கள் சாபங்களும் பலிக்கும் ஆனால்
எங்களுக்கு சபதங்களே பிடிக்கும்
என்னை ஏமாற்றியதாய் நீ நினைக்கிறாய்
இல்லை என்னைக்காப்பாற்றினாய் என்று நான் நினைக்கிறேன்
நம்பிக்கைத் நம்பிக்கைத்துரோகம் உனக்கு சகஜமாய் விட்டது
அதன் வலிகள் எனக்கு பலம் தந்து விட்டன
சுதாகரித்துக்கொண்டேன்
உத்தமர்கள் இருக்கையில் உத்தமிகளும் இருப்பார்கள்
குற்றத்திற்கு தண்டனையும்
நற்செயலுக்கு சன்மானமும் நிச்சயமாக கிடைக்கும்
எங்கேனும் நாம் சந்தித்துக்கொண்டால் அன்று தான் நிலவரம் புரியும்
சடப்பொருட்களில் நம்பிக்கை வைத்த நீயும்
உண்மையில் திடம் கொண்ட நானும்
நிறுத்துப்பார்க்கலாம்...
நிஜம் உனக்குப்புரியாலாம்...
அது வரை நான்...
கடற்கரைகளில் சுகமாக காற்று வாங்குவேன்
கடைத்தெருக்களில் சுதந்திரமாக நடமாடுவேன்
தேவதை வாசம் தேடி
பேதை தரிசனம் வேண்டி
Subscribe to:
Post Comments (Atom)
அருமையாகவும் நேர்த்தியாகவும் எழுதுகிறீர்கள்... தொடருங்கள்...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்திய ராணுவம் பற்றி ஈழத்திலிருந்து ஒரு ஆதார மடல்