Sunday, June 3, 2012

தனிமை

தொலைத்தலும் இழத்தலும்
கவலையும் சந்தோசமும்
என் வாழ்வின் வழமையான ஒன்று
எல்லாம் இருந்தும்


எதுவுமே இல்லாதவளாய்
வெறுமையாய் என்னையே நான் வெறுத்து
நின்ற வேளை விழிகளுக்கு ஒளி தந்து
இருளை அகற்றியவனும் நீ தான்


தலை நிமிர்ந்து வாழு
உனக்காக நான் இருப்பேன்
என்றவனும் நீ தான்


அன்புக்கு இலக்கணம் சொன்னவனும்
நீயே அதனாலேயே என் பயணம்
தொடர்ந்து சென்றது உன் பின்னால்


உன்னை நம்பி நானிருந்தேன் ஆனால்
நீயோ ஒரு நொடிப்பொழுதில்
என்னை கலங்க வைத்தது ஏனோ?
ஓரக்கண்ணின் கசிவைத்தவிர


மெளனித்தவளாய் நானானேன் இன்று


வாழ்வில் எதுவும் நிரந்திரமல்ல என்று
அழகாய் பதிய வைத்து சென்றாய்
யாரோ ஒருவருக்காக என் அன்பை


எப்படி உன்னால் விலை பேச முடிந்தது
பூஜித்தபடி நான் இப்போ வெறித்த
மனதுடன் கால்கள் மட்டும்
தனியே நடை போடுகிறது


என்றும் என் வாழ்வின் உற்ற துணை
தனிமை மட்டும் தான் ....
தனிமை கொடுமையாக தான் இருக்கிறது
என் வாழ்வு நிரந்திரமற்றது


அதில் நீயும் நிரந்திரமற்றவன் - இருந்தும்
என் மனம் சொல்கிறது
முதலும் முடிவும் நீதான் என்று...





No comments:

Post a Comment