Monday, June 11, 2012

உன் கண்ணீரையாவது சிந்தி விட்டு போ!

என் வாழ்க்கை
பக்கங்களுக்கு
பற்றாக்குறை


அதில்
உன் நினைவுகளை
எழுத வேண்டுமென்று நினைத்ததால்.


முதல் பக்கத்தில்
எழுதப்போவதென்னவோ
நான் தான்.


உன்னை
முதன் முதலில்
பார்த்த நாளை
என் மூன்றாம்
பக்கத்தில் எழுதுகிறேன்.


முதல் இரண்டு பக்கங்கள்
நான் கண்ட
கனவுகளில்
வந்த உன்
உருவங்களை பற்றி
எழுதுவதற்க்காக!


என் இறுதி பக்கங்களில்
முடிக்கபடாமலே
போய் விட்டன.


நீ என்னை பிரிந்ததால்
மட்டுமல்ல.
என் உயிரும்
என்னை பிரிந்ததால்.


உன் கண்ணீரையாவது
சிந்தி விட்டு போ....
என்
இறுதி பக்கங்களுக்காக.....


அழகான வீட்டில்
அளவான குடும்பம்
பாசம் காட்ட இரு குழந்தை
அன்பான மனைவியாய்
ஆயுள் முழுதும் நீ!


இவையனைத்தும் கிடைக்குமென்றே
நித்தம் மகிழ்ந்திருந்தோம்.


புத்தம் புது வாழ்க்கைக்காக
நம் கனவுகளை
கனவென்றே எண்ணி
பிரிந்து விட்டாய்


என்னுயிர்
காதலியே!







No comments:

Post a Comment