முதலில் என் மனதை காயப்படுத்தினாய்... பின் என் உணர்வுகளை கூட சாகடித்தாய்... இறுதியில் என்னையே வெறுக்க வைத்தாய்...
நீ இன்றி நான் இல்லை
என்று இதுவரை
நினைக்கவும் வைத்தாய்....
ஆனால்
இனி இதுபோல்
உன் கற்பனைகளுக்கு
நான் இரையாக போவதில்லை...
உண்மையாகத்தான் சொல்கிறேன்
'மன்னித்துவிடு'
உன்னையே உயிராக எண்ணிய
என் மனம் தெளிந்துவிட்டது இன்று
உன் பொழுதுபோக்கிற்காகத்தான்
நீ காதல் எனும் நாடகம் ஆடினாய் என்று....
ஆனால்......
உன் நடிப்பால் ஏமாறிய என் இதயமோ
நான் சொல்லும் உண்மையை கேட்க மறுக்கிறது
உன்னையே எண்ணி நித்தம் தவிக்கிறது....
எனக்காக ஒரு உதவி செய்வாயா....
நீ உடைத்த என் இதயத்திற்கு நீயே சொல்லிவிடு
நீ என்னுடன் பழகியது ஒரு பொய் நாடகமே என்று....
உன்னிடமும் என் இதயம் ஒரு கேள்வி கேட்கிறது
நீ என்னை விரும்பாவிடிலும் நான் உடைந்திருக்கமாட்டேன்
ஆனால்....
நீ ஏன் விரும்புவது போல் நடித்து ஏமாற்றி
என்னை உடைத்தாய்இ வலிக்கிறது...
என் துடிப்பை மட்டும் இன்னும் ஏன் நிறுத்தாமல் உன் மெளனத்தால் வதைத்துக்கொண்டு இருக்கிறாய்????
உன்னை பற்றி கவிதை
எழுத சொல்கிறார்கள்.....
நம் பழைய சந்திப்புகளை தான்
தோண்ட வேண்டும் போல....
எவ்வளவு அழகான நினைவுகளாக
இருந்தாலும் அழாமல் நினைத்து பார்க்கமுடியவில்லை என்னால்.....
நீ பிணமாய் போன பின்பு
உன்னை பார்க்க மட்டுமே
துடிக்கிறேன்...!
உன்னோடு பேசுவதற்கு அல்ல....
ஒன்று தெரியுமா உனக்கு?
ஒரு பிணம் இன்னொரு பிணத்தை
பார்க்க துடிப்பது நம் காதலில்
மட்டும் தான்........
ஆசை ஆசையாய் எழுதிய கவிதைகளில்
சில இறந்து போய்விட்டன....
சில கவிதைகள்
இந்த கவிதையை போல
அழுது கொண்டிருக்கின்றன.......