Wednesday, November 23, 2011

உன் நினைவால்.........

தனிமையில் இருக்கும்
போதெல்லாம் உன்நினைவுகள் என்
நெஞ்சில் ஊஞ்சல் ஆடுகின்றன
கடவுளை தரிசிக்க மறந்தேன்
உன் நினைவால்
அன்னையை மறந்தேன் - உன்
அறிவூட்டலால்
உறவுகளை மறந்தேன் - உன்
அரணைப்பால்
மொத்தத்தில் என்னையே மறந்தேன்
உன் நினைவால்

பதில் சொல்!!!!!!!

காதலியே............
காதல் பிடிக்குமென்றாய்
காதல் செய்தேன்
கவிதை பிடிக்குமென்றாய்
கவிஞன் ஆனேன்
நான் காதலித்தது
உன்னைத் தான் என்றதும்
எனது காதல்
பிடிக்கவில்லை என்கிறாய்
அடியே........... ஏனடி
என் காதல் உனக்கு
பிடிக்காது போன...........
காரணமென்ன?
அதையாவது ஓரு முறை
சொல்லி தொலையேன்டி......

உனக்குப் புரியாத............?

பூப் போன்ற
மென்மையான
என் மனதை
வாளால்
கிழித்து வேடிக்கை
பார்த்துக் கொண்டிருக்கும்
உன் மனசு
இங்கு யாருக்கு
வரும் சொல்..........?
உனக்கு
நான் வேடிக்கைப் பொருளாக
இருக்கலாம்
ஆனால்...........
என் வாழ்க்கையே
இன்று
உன்னால்
கேள்விக்குறியாக
இருப்பது
உனக்குப் புரியுமா??????

Monday, November 21, 2011

நிறுத்தி விடு

பாவையே
பார்வையால்
என் மீது அம்பை வீசினாய்
அர்த்தம் புரியாத
புன்னகையை
புதிராக விட்டாய்
சில நிமிடங்கள் என்னை
சீண்டி விட்ட
உன் செயல்கள்
பாவமடி நான்
அர்த்தம் புரியவில்லை
பண்பென எண்ணி
பாசத்தை விதைத்தேன்
இறுதியில் தான் நான்
வேசம் கண்டேன்.
வேண்டாமடி
உன் வீணான
வேலைகள்
நிறுத்தி விடு!!!!!!!!!!!!

மனம்

நேற்று போல்
இன்று இல்லை
இன்று போல்
எதுவும் இல்லை
உனக்கு எதிர்
நான் இல்லை
உன் போல் வேறு
யாரும் இல்லை
அதனால் என் மனம்
இங்கு இல்லை
இப்போ
எங்கே என
கேட்கிறாயா!!!!!!!!!!
அதை
சொல்லும்
பக்குவம்
நிச்சயமாக
எனக்கு
இல்லை.....

உனக்கு மட்டும் தான்

அழகியே எனதன்பே.............
பூப் போன்ற முகமழுகு
உனக்கு மட்டும் தான்
பால் போன்ற உடலழுகு
உனக்கு மட்டும் தான்
நிலா போன்ற உடலழுகு
உனக்கு மட்டும் தான்
நதி போன்ற சிரிப்பழுகு
உனக்கு மட்டும் தான்

குடை போன்ற குணயழுகு
உனக்கு மட்டும் தான்
உடை போன்ற இமையழகு
உனக்கு மட்டும் தான்
-9 பாதை போன்ற ழூக்கழகு
உனக்கு மட்டும் தான்
ஏகே 47 கண் போன்ற விழியழகு
உனக்கு மட்டும் தான்

ழூச்சு போன்ற பாதமழகு
உனக்கு மட்டும் தான்
பேச்சு போன்ற குரலழகு
உனக்கு மட்டும் தான்
நீர் போன்ற இரக்கமழகு
உனக்கு மட்டும் தான்
நீர் குமிழி போன்ற பருவமழகு
உனக்கு மட்டும் தான்

பிரம்மன் படைப்பில்
இப்புவியில்
நீ
மட்டும் தான்................

நிஐமான காதல்

காதலிக்கத் தெரிந்த
உனக்கு
காதலைச் சொல்ல
துணிவில்லை..................
கண்களால் பார்க்கத் தெரிந்த
உனக்கு
பேசுவதற்கு வார்த்தைகள்
தெரியவில்லை.......................
மனதைக் கலைக்கத்
தெரிந்த உனக்கு
என் மனதின் விருப்பத்தை
அறிய முடியவில்லை...........
அதனால் தான்
கேட்கின்றேன்
நீ என்னைக் காதலித்தது
நிஐம் தானா???
நிஐமென நம்பி வாழ்ந்த
நான் இன்று
உன் நிழலைத் தேடி
அலைகிறேன்...........
ஏனெனில்
நான் உன் மேல்
கொண்டது
நிஐமான காதல்!!!!

எதிர்பார்ப்பு!!!!!!!!!!!!!!

என் இதயத்தில் முதல் முதலாக
இடம் பிடித்த என் காதலியே
அன்பே எனக்கும்
முதல் முதலாக
பிடித்தது உன் அன்புதான்
அந்த அன்பில் தான்
நான் என்
இதயத்தை
உன்னிடம்
கொடுதது விடடேன்
ஆனால்
இப்போதுதான் புரிகிறது
என் வாழ்க்கையில்
மனைவி என்று
எழுத்து இருந்தால்
அது நீயாகத் தான் இருக்கனும்
என்று எதிர்பார்க்கின்றேன்
நீ எனக்கு
கிடைக்க மாட்டாய்
என்றால் என் மூச்சு
அந்த நேரமே
நின்று விடும்
அது நிச்சயம்
அன்பே நான்
இருக்கும் வரை
உனக்காக என் இதயம்
எந்நேரமும்
திறந்து இருக்கும்

எப்போது சொல்வாய்.................

ஒரு பார்வையால்
ஒராயிரம்
கதை சொல்லி
என்னை பதறவைக்கும்
உன் கண்கள் பிடிக்கும்

நிலவுக்குள்
மின்னலடித்தது போல்
என்னை நோக்கி
நீ வீசும் உன்
புன்னகை பிடிக்கும்

நள்ளிரவில் தெரியும்
நட்சத்திரமாய்
உன் கூந்தலில்
ஒய்யாரமாய்
உட்கார்ந்திருக்கும்
ஒற்றை ரோஐh
பிடிக்கும்

ஆயிரம் பேருக்கு
மத்தியில்
நீ வந்தாலும்
உன்னை எனக்கு
உணர்த்தும்
உன் கொலுசின் ஒலி
பிடிக்கும்

தேர் கொண்ட
பார்வையால் நான்
பார்க்கும் போதெல்லாம்
நானிக் கவிழும்
உன் பெண்மை
பிடிக்கும்

உன்னில் எல்லாம்
எனக்கு பிடித்துப்போக
நீ எப்போது
உன் செல்விதழால்
சொல்வாய்
என்னை பிடிக்குமென்று!!!!!!!!!!!!!!

Sunday, November 6, 2011

என் காதலி நீ என்னைக்காதலி.

கடல் வெள்ளம் போல் புகுந்து
கனவுகளை வளர்த்தவளே

காந்தப்பார்வையாலே
கண்களுக்குள் இனித்தவளே

தவறு நான் செய்யவில்லை
தண்டனை நீ தருகின்றாய்

சிறைக்குள் நான் துடிதுடிக்க
சிரித்து நீ போகின்றாய்

ஊமைக்குயிலடி நான்
உள்ளுக்குள் அழுகின்றேன்

ஓரிரு வார்த்தைளோ
மெல்ல மெல்ல கொல்லுதடி

என்
உதிரத்தால் எழுதி வைக்கும்
உண்மையடி பெண்ணே

நீ போகுமிடமெங்கும்
பாதி உயிரோடும்
என் பயணம் தொடரும்

புத்தகப்பையுக்குள்ளே
பாவத்தை சுமப்பவளே

இறந்து நான் போன பின்னே
என் இதயத்தை அறுத்துப்பார்

இதயச்சுவர்களில்
எழுதப்பட்டிருக்கும் உன் பெயர்

அப்போதாவது
நீ என்னைக்காதலி.

Thursday, November 3, 2011

'மன்னித்துவிடு'

முதலில் என் மனதை
காயப்படுத்தினாய்...
பின் என் உணர்வுகளை கூட
சாகடித்தாய்...
இறுதியில் என்னையே
வெறுக்க வைத்தாய்...
நீ இன்றி நான் இல்லை
என்று இதுவரை
நினைக்கவும் வைத்தாய்....
ஆனால்
இனி இதுபோல்
உன் கற்பனைகளுக்கு
நான் இரையாக போவதில்லை...
உண்மையாகத்தான் சொல்கிறேன்
'மன்னித்துவிடு'

நீ காதல் எனும் நாடகம் ஆடினாய்

உன்னையே உயிராக எண்ணிய
என் மனம் தெளிந்துவிட்டது இன்று
உன் பொழுதுபோக்கிற்காகத்தான்
நீ காதல் எனும் நாடகம் ஆடினாய் என்று....
ஆனால்......
உன் நடிப்பால் ஏமாறிய என் இதயமோ
நான் சொல்லும் உண்மையை கேட்க மறுக்கிறது
உன்னையே எண்ணி நித்தம் தவிக்கிறது....
எனக்காக ஒரு உதவி செய்வாயா....
நீ உடைத்த என் இதயத்திற்கு நீயே சொல்லிவிடு
நீ என்னுடன் பழகியது ஒரு பொய் நாடகமே என்று....
உன்னிடமும் என் இதயம் ஒரு கேள்வி கேட்கிறது
நீ என்னை விரும்பாவிடிலும் நான் உடைந்திருக்கமாட்டேன்
ஆனால்....
நீ ஏன் விரும்புவது போல் நடித்து ஏமாற்றி
என்னை உடைத்தாய்இ வலிக்கிறது...
என் துடிப்பை மட்டும் இன்னும் ஏன் நிறுத்தாமல் உன் மெளனத்தால் வதைத்துக்கொண்டு இருக்கிறாய்????

கவிதை

உன்னை பற்றி கவிதை
எழுத சொல்கிறார்கள்.....
நம் பழைய சந்திப்புகளை தான்
தோண்ட வேண்டும் போல....
எவ்வளவு அழகான நினைவுகளாக
இருந்தாலும் அழாமல் நினைத்து பார்க்கமுடியவில்லை என்னால்.....
நீ பிணமாய் போன பின்பு
உன்னை பார்க்க மட்டுமே
துடிக்கிறேன்...!
உன்னோடு பேசுவதற்கு அல்ல....
ஒன்று தெரியுமா உனக்கு?
ஒரு பிணம் இன்னொரு பிணத்தை
பார்க்க துடிப்பது நம் காதலில்
மட்டும் தான்........
ஆசை ஆசையாய் எழுதிய கவிதைகளில்
சில இறந்து போய்விட்டன....
சில கவிதைகள்
இந்த கவிதையை போல
அழுது கொண்டிருக்கின்றன.......