Thursday, November 3, 2011

கவிதை

உன்னை பற்றி கவிதை
எழுத சொல்கிறார்கள்.....
நம் பழைய சந்திப்புகளை தான்
தோண்ட வேண்டும் போல....
எவ்வளவு அழகான நினைவுகளாக
இருந்தாலும் அழாமல் நினைத்து பார்க்கமுடியவில்லை என்னால்.....
நீ பிணமாய் போன பின்பு
உன்னை பார்க்க மட்டுமே
துடிக்கிறேன்...!
உன்னோடு பேசுவதற்கு அல்ல....
ஒன்று தெரியுமா உனக்கு?
ஒரு பிணம் இன்னொரு பிணத்தை
பார்க்க துடிப்பது நம் காதலில்
மட்டும் தான்........
ஆசை ஆசையாய் எழுதிய கவிதைகளில்
சில இறந்து போய்விட்டன....
சில கவிதைகள்
இந்த கவிதையை போல
அழுது கொண்டிருக்கின்றன.......

No comments:

Post a Comment