Monday, November 21, 2011

எப்போது சொல்வாய்.................

ஒரு பார்வையால்
ஒராயிரம்
கதை சொல்லி
என்னை பதறவைக்கும்
உன் கண்கள் பிடிக்கும்

நிலவுக்குள்
மின்னலடித்தது போல்
என்னை நோக்கி
நீ வீசும் உன்
புன்னகை பிடிக்கும்

நள்ளிரவில் தெரியும்
நட்சத்திரமாய்
உன் கூந்தலில்
ஒய்யாரமாய்
உட்கார்ந்திருக்கும்
ஒற்றை ரோஐh
பிடிக்கும்

ஆயிரம் பேருக்கு
மத்தியில்
நீ வந்தாலும்
உன்னை எனக்கு
உணர்த்தும்
உன் கொலுசின் ஒலி
பிடிக்கும்

தேர் கொண்ட
பார்வையால் நான்
பார்க்கும் போதெல்லாம்
நானிக் கவிழும்
உன் பெண்மை
பிடிக்கும்

உன்னில் எல்லாம்
எனக்கு பிடித்துப்போக
நீ எப்போது
உன் செல்விதழால்
சொல்வாய்
என்னை பிடிக்குமென்று!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment