Friday, October 21, 2011

உன் இருத்தலையாவது நான் உறுதிப்படுத்தி கொள்வதற்கு…


நீ இப்போது எங்கே இருக்கிறாய் .
தொலைபேசி அலறுகிறது
ஒரு தடைவையாவது தூக்கமாட்டாயா..?..?

தொலைபேசியை வீட்டிலே விட்டுவிட்டு;;….
... நீ வெளியே சென்று விட்டாயோ..?

வெளியே செல்வதாயின் - நீ
யாருடன் சென்றிருப்பாய்

ஒரு வேளை தொலைபேசியை கையிலே …வைத்துக்கொண்டு
யாரோடாவது உரையாடிக்கொண்டிருக்கிறாயோ..?

உனது உரையாடலிலாவது
நான் ஞாபகப்படுவேனா…?..

நீ ஏன் எனக்கு
ஒழிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.

என்னை எங்கோ எறிந்து விட்டு…நீ
காணமல் போனாய்.

காற்றில் உனது வாசனைகளை அனுபவிக்கிறேன்.
கனாக்களில் உனது வருகையை அவதானிக்கிறேன்.

இப்போதைய உனது தோற்றம் எப்படிஇருக்குமோ…
மாற்றம் நிகழ -நான் காரணம் ஆனேனோ….?..?

எனது தொலைபேசி அழைப்பை தூக்காவிடிலும்
துண்டித்தாவது விடுவாயா..?..?
உன் இருத்தலையாவது நான் உறுதிப்படுத்தி கொள்வதற்கு…

Monday, October 17, 2011

இல்லை இல்லை மனைவி......

காதலை மறுத்த காதலியே......
உனக்கு என்ன விலை வேண்டும்......
முழுவதும் என் மனம் விட்டு அகல......
என்னை வேண்டாம் என்றாயே ......
அந்நொடியே என்னை விட்டு அகன்றாயே.........
முழுவதும் வெறுத்து புறக்கணிதாயே..............
என்னுள் இருந்து போன போதே என் நினைவுகளை ஏன் எடுத்துச் செல்லவில்லை.............
மீளத் துயரில் நலிந்து வாழ்கிறேன்.......
தினமும் தூக்கமின்றி சாகிறேன்......
உன்னை நினைக்க தெம்பு வேண்டும் என்பதற்காக உண்கிறேன்......
நாம் காதலித்த போது பேசிய பேச்சுக்கள் இப்போதும் என் காதில் இசையென ஒலிக்கிறது........
உன்னை ஓரகண்ணால் பார்த்து இன்புற்ற நாட்களை எண்ணி எண்ணி நாட்களை நகர்த்துகிறேன்......
என்னை தினம் தினம் கொள்வதற்கா என் மனதில் உன் நினைவுகளை மட்டும் விதைத்து சென்றாய்........
விதைத்துச் சென்ற நினைவுகள் வளர்ந்து கவலைக் கனிகளைத் தருகிறது.......
இரக்கமில்லா காதலியே ஏன் இப்படி செய்தாய்...........
நீ தந்துச் சென்ற கவலைக் கனிகளை மெல்லவும் முடியாமல் உண்ணவும் முடியாமல் தவிக்கிறேன்.......
ஓன்று மட்டுமே இறுதியை சொல்கிறேன்,
கடைசி வரையில் நீ மட்டுமே என் காதலி(இல்லை இல்லை மனைவி)
திரும்பி வர மாட்டாய் எனத் தெரிந்தும்,
உனக்காக காலமெல்லாம் காத்திருப்பேன்,
எத்தனை ரணங்களையும் தாங்கி.....

மறக்க முடியவில்லையடி..!

மறக்க முடியவில்லையடி..!

உன் நியாபகத்தின் வேதனைகளை

மறந்து விடு

என நீ சொல்லிய அந்த ஒருமுறை

இன்றும்

ஒரு கோடி முறையாய்

என் காதில் ஒலிக்கிறதடி
..
காதல் எனும் புனித பயணத்தில்

எனை நீ இணைத்த போது

நான் மறுத்திருக்க வேண்டும்..

தவறவிட்ட அந்த தருணத்தின்

தண்டனை தான்

இன்று உன் பிரிவை எண்ணி

தவமிருக்கிறேன்..

உன்னை பார்த்த முதல் தருணம்

நியாபக படுத்திக் கொள்..!

ஒரு பார்வை

ஒரு முறை தான் பார்த்தாய்..!

அவ்வளவுதான்

பற்றிக்கொண்டன என் கண்கள்

கண்ணில் பற்றிய தீ

உடலெங்கும் பரவி எனை சூறையாடியது.

. ஏன் அப்படி பார்த்தாய்...

அதுவும் இப்படி

எரிந்து சாம்பலாகும் அளவிற்கு..!

நீ கடந்து போகும் போது

உன்னை தூர நின்று

தரிசிக்கிற கும்பலில்

ஒருவனாகவே இருந்து விட நினைத்தேன்

நீ விடவில்லை

பற்ற வைத்த தீக்குச்சியாய்

எனக்குள் ஏற்றி வைத்த

எண்ணங்களோடும் எரிகின்ற

மெழுகுவர்த்தியாய்

நானாகி போக

நீ அந்த தீபத்தில்

ஒரு தேவதையாய்

தோன்றி என் நினைவுகளை

ஆரத் தழுவினாய் ..இப்படி..

என் இதயத்தின் வாசலை

பார்வையால் திறக்க தெரிந்த உனக்கு

அதை அடைப்பதற்கு

உன் சுட்டெரிக்கும்

வார்த்தை தானா கிடைத்தது ..

உன் வானில் மின்னிடும் நட்சத்திரமாய்

நானிருக்க கண்ட கனவுகள்

களைந்து போனாலும் வானவில்லாய்

சில தருணம் வாய்ப்பு தந்தாயடி..!

போதும் அந்த வாழ்வு

என விலகி கொண்டேன்..

ஆயினும்

மறக்க முடியவில்லையடி..

உன் நியாபகத்தின் வேதனைகளை

உனக்குள் எனை இழந்த சோகத்தினை.

மறக்கமுடியவில்லையடி.. !

உன்னோடு ஏன் வந்தது

உனை அணைத்த கைகள்
என்னோடிருக்கின்றன
உன்னோடு வரவில்லை

உன் பெயர் உரைத்த உதடுகள்
என்னோடிருக்கின்றன
உன்னோடு வரவில்லை

உனை நாடி நடந்த கால்கள்
என்னோடிருக்கின்றன
உன்னோடு வரவில்லை

உனைச் சுமந்த என் இதயம்
என்னோடில்லை
உன்னோடு ஏன் வந்தது

உயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்

மெல்லச் சிரித்து வந்தாள்
கண்கள் எரித்து வந்தாள்
.
நெஞ்சகம் புகுந்தாள்
வஞ்சகம் புரிந்தாள்
.
மனம் சிதற வைத்தாள்
இதயம் பதற வைத்தாள்
.
உருவம் மெலியவைத்தாள்
உள்ளம் நலிய வைத்தாள்
.
உயிர் உருக வைத்தாள்
ஊன் எரிய வைத்தாள்
.
என் காதல் கொன்றாள்
ஏனோதான் சென்றாள்

எனக்குயிர் கொடுப்பாயே

என்னைச் சாகடிக்க வந்தவளே
என் மனம் நோகடிக்க செய்தவளே
என் தூக்கம் எடுத்துச் சென்றாளே
பெரும் துயரம் கொடுத்து பிரிந்தாளே

சோலை வனமாய் அவளிருந்தாள் - எனைப்
பாலை வனமாய் ஆக்கிச் சென்றாள்.
கனவுகளை கானல் நீராக்கிச் சென்றாள்
நெஞ்சினை கனலாய் கொதிக்க வைத்தாள்

ஒத்துவராக் காதலியாய் அவளிருந்தாள்
ஒற்றைக் காலணியாய் ஆக்கிச் சென்றாள்
படுக்கையை பழுதாக்க வந்திருந்தவள்
தலையணை ஏனோ நனைக்க விட்டாள்

என் கவிதையும் வரியின்றித் துடிக்கிறதே
வரும் செற்களும் சரியின்றித் தவிக்கிறதே
எழுத்துக்களும் எரிகின்ற தணலானதே
மீண்டும் வந்து எனக்குயிர் கொடுப்பாயே!

உன் நினைவுகளை எது வந்து அழிக்கும்

நீ அனுப்பிய குறுந்தகவல்கள்
உள் பெட்டகத்தில் அழிந்துவிட்டன

இணந்திருந்து எடுத்த நிழற்படங்களும்
அழிந்தே போய் விட்டன

தெய்வீகமாய் இசைத்த உன் குரல்களை
தென்றல் வந்து அழித்துவிட்டது

கைகோத்து நாம் நடந்த காற் தடங்களை
கடலலைகள் அழித்துவிட்டன.

என் உதட்டில் உன் உதட்டின் ஈரத்தை
காற்றலைகள் அழித்துவிட்டன.

உடல்களின் உல்லாச உரசல்களை
உணர்வலைகளாய் அழிந்த்துவிட்டன.

என் நெஞ்சத்தில் உன் நினைவுகளை
எது வந்து அழிக்கும்...

வாழு வாழ விடு

உயிரை பிழியும் உந்தன் நினைவு உனக்கு தெரியுமா?
ஊமை ஆனேன் உன்னால் தானே உணர முடியுமா?
இருக்கும் வரைக்கும் இல்லை என்று சொல்ல விருப்பமா?
இழந்து விட்டால் திருப்பி பெற இதயம் கிடைக்குமா??
இங்கே இன்பம் இருக்குமா சொல் இரும்பும் பேசுமா????

என் இதழ்களைக் கேட்டுப் பார் என் நெஞ்சத்தின் வேதனை சொல்லும்!!!
என் இமைகளைக் கேட்டுப் பார் என் கனவுகள் கலைந்த விதம் சொல்லும்!!!
என் இதயத்தைக் கேட்டுப் பார் என் ஆசைகள் சிதைந்த விதம் சொல்லும்!!!
என் இரவைக் கேட்டுப் பார் கண்ணீர் வடிக்கும் என் உன் நினைவுகளைச் சொல்லும்!!!

என் மௌனத்தின் அர்த்தமே உனக்குப் புரியாத போது என் கண்ணீரின் அர்த்தமா உனக்குப் புரியப் போகிறது???

காத்திருப்பது சுகம் காதலி வருவாள் என்றால்...

உன்னையும் எல்லோருக்கும் பிடிக்கும்
என்னையும் எல்லோருக்கும் பிடிக்கும்
எங்களைத்தான் எவருக்குமே பிடிக்கவில்லை.

உன் நினைவுப்பரிசு எதற்கு?
உன் நினைவே பரிசு எனக்கு.

நினைப்பதற்கு பல நினைவுகள்
இருந்தபோதும் உன் நினைவை விட
இனிமையான நினைவுகள்
எதுவும் இல்லை.

கடலோடு மழை வரும்
அது மழைக் காலம்
என் விழியோடு கண்ணீர்
வரும்
அது உன்
நினைவுக்காலம்
இதுவே என் நிகழ்காலம்.

நான் சாகும் வரை
என்னை
சாகடித்து கொண்டு
இருக்கும்
உன் நினைவுகள்.

கண்ணீருடன்
வாழும் காலம்
என்றும்
இனிமையாக
இருக்கிறது
உன் நினைவோடு
வாழ்வதினால்.

உன் நினைவுகள்
என் உயிரின்
நடுவில்
அறையப்பட்ட
ஆணியடி.

மண்ணோடு
நான் மறையும்
வரை
மறைவதில்லை
உன் நினவுகள்.

உன் நினைவினால்

உன் நினைவால்.......

ஒரு
ஓரமாய் அமர்ந்திருந்து
உன்னை
நேசித்த ஒவ்வொரு
கணத்தையும் சிந்தித்துப்
பார்க்கிறேன்
என்
இதயம் கூட
நான் சொல்வதை மறுத்து
என்னை விட்டு
வெகு தூரத்தில் பயணிக்கின்றது.
புண்பட்ட என்
மனம்
உன்னை மறக்கக் கூட
முடியாமல் பதைத்துக்
கொண்டிருக்கிறது.
ஏன் உன்னைப்
பார்த்தேன்...?
ஏன் உன்னை நேசித்தேன்.?
எப்படி நீ என்னுள்
வந்தாய்.?
இன்றும் கூட புரியவில்லை
புலம்புகின்றேன்
உன்
நினைவால்

துரோகம்

உன்னை மறக்க நினைக்கும் ஒவ்வொரு நொடியிலும்
ஒரு உயிர் பிரியும் வலி என் இதயத்தில் ...

உன்னை மறக்க நினைத்தாலும்
கோடி முறை நினைக்கிறது என் இதயம் ...

உன் மௌனத்தைக் கூட தாங்காத என் இதயம்
நீ இல்லாமல் எப்படி உயிர் வாழும் ?

உன்னால் மட்டும் எப்படி முடிந்தது என்னை மறக்க ?
ஏன் உன்னை இதயத்துடன் கடவுள் படைக்கவில்லையா???

உன் இதயம் உனக்கு சொல்லவில்லையா
நீ எனக்கு செய்யும் துரோகத்தை ???

காதலித்துப்பார்!

காதலித்துப்பார்!
உனக்குள் இதயமென்று ஒன்று இருப்பதை உணர்வாய்!
அதற்குள் ஒரு ஜீவன் உயிர்ப்பதை உணர்வாய்!
தடித்த மனம் கூட அவளுக்காய் துடிக்கும்!
தனிமையின் தவிப்புக்கள் விழிகளில் தெரியும்!
காதலித்துப்பார்!

உலகில் உன்னவள் மட்டும் அழகாக தெரிவாள்!
பெண்மையின் நளினம் கண்டு உன் செயல்களெல்லாம் மனிதமாகும்!
அவள் வதனம் கண்டு,உன் ஆண்மை கூட துள்ளித்திரியும் மான்குட்டியாகும்!
கால்கள் விண்வெளியில் மிதக்க, நினைவுகளோ செலவில்லாமல் செவ்வாய்க்கு பறந்துவிடும்!
காதலித்துப்பார்!

அவள் அழகை இரசிக்க இயற்கையைத் துணைக்கழைப்பாய்!
நடுநிசியில் நிலாவின் முகம் பார்த்து புலம்புவாய்!
விண்மீன்கள் கூட உன் காதல் கதை கேட்டு கண்சிமிட்டும்!
பூக்கள்,கடல்,மலைகள் என இறைவனின் படைப்புக்கள் யாவும் உனக்கு பிடித்ததாகும்!
காதலித்துப்பார்!

வாழ்க்கையில் அன்பின் வேகத்தை புரிந்துகொள்வாய்!
கோபத்தின் தாகம் அது உனக்கு விடாய்க்காது!
வாழ்க்கையில் வேண்டாத இறைவனை அவளுக்காய் நினைத்துப்பார்ப்பாய்!
அவளுக்கு பிடித்தவைகள் உன் வீட்டை அலங்கரிக்கும்!
காதலித்துப்பார்!

செல்போன் உனக்கு கடவுள் ஆகும்!
SMS அதன் வரமாகும்!
தினமும் காட் அதற்கு இரையாகும்!
அதுவே உனக்கு தொழிலாகும்!
காதலித்துப்பார்!

பரீட்சையில் வராத பயத்தை அவள் உதடுகள் சொல்லப்போகும் வார்த்தையில் உணர்வாய்!
அவள் பெயர் மட்டும் தினமும் உச்சரிக்கும் மந்திரமாகும்!
படிப்பு என்றால் பத்தடி பாய்ந்தோடும் உனக்கு அவள் பற்றி யாவும் மனப்பாடம்!
புத்தகம் தலைகீழாகும்,அது கூட தெரியாமல் அவள் முகம் அதில் நிழலாடும்!
காதலித்துப்பார்!

இரவின் நீளத்தை அறிந்துகொள்வாய்!
தலையணை அவள் மடியாகும்!
உடல் மட்டும் உறங்க உணர்வுகள் கனவில் விழித்தெழும்!
உன் கனவை கலைக்க ஆதவன் விழித்தெழ தயங்குவான்,சேவல் கூவ தயங்கும்,அலாரம் அடிப்பதும் கேட்காது!
காதலித்துப்பார்!

அவள் தரிசனம் பெற வீதியோரம் காத்திருப்பாய்!
கால்கள் அவள் செல்லுமிடமெல்லாம் நடைபயிலும்!
பலமுறை கண்ணாடி பார்ப்பாய்,அவள் முகம் காண!
எந்தபெண்ணும் அவளாக தெரிவாள்!
காதலித்துப்பார்!

சோலைவனம் கூட பாலைவனமாகும்!
கண்ணீர் நைல் நதியாய் பெருக்கெடுக்கும்!
இதயம் வெடிப்பதை உணர்வாய் பூகம்பமாய்!
துன்பக்கடலில் மூழ்கி சோகத்தின் ஆழத்தை அறிவாய்!
காதலித்துப்பார்!

பாடல்கள் மனதிற்கு துணையாகும்!
கண்ணீர் பேனாவின் மையாகும்!
கவிதைகள் கையில் மடலாகும்!
அவள் ஞாபகங்கள் படரும் கொடியாகும்!
காதலித்துப்பார்!

மறதிகள் மறந்துவிடும்!
நினைவுகள் நெருங்கிவிடும்!
உறவுகள் இருந்தும் அநாதையாய் உணர்வாய்!
உயிர் இருந்தும் நடைபிணமாவாய்!
காதலித்துப்பார்!

உன் மேல் நீயே வெறுப்பை உணர்வாய்!
உன் உயிர் கூட மயிர் போல அற்பமாகிவிடும்!
மனச்சிறையிலே,சித்திரவதையை தாங்கமுடியாது,மரணத்தை நெருங்கப் பார்ப்பாய்!
மொத்தத்தில் நீ இறக்காமலே இப்பூமியில் உனக்கு சொர்க்கமோ நரகமோ நிச்சயம்!
அது அவள் கைகளில்...................
காதலித்துப்பார்!

Monday, October 3, 2011

வேண்டும்....♥

என் ஆசைக்காதலனே தினமும்
விடியும் பொழுதுகளில் உனக்கு
முன் நான் எழுந்து குளித்து பொட்டு
வைத்து எந்தன் நெற்றி பொட்டு
உந்தன் நெற்றியில் பிறை சந்திரனாய்
பதிந்து விட அழுத்தியே உனக்கு
நான் முத்தமிட்டு உன்னை எழுப்பிட
வேண்டும் நீயும் ஆனந்தத்தில்
என்னை அணைத்திட வேண்டும்....♥

உனக்கு நான் உணவூட்டிட வேண்டும்
உன் எச்சில் பட்ட உணவை நானும்
உண்டு பசி ஆறிட வேண்டும்
வெளியே செல்லும் உனக்கு
உன் வழித்துணையாய்
என் இதழ் முத்தம் தந்து
அனுப்பிட வேண்டும்....♥

நீ இன்றி நான் தனித்திருக்கும்
நிமிடங்கள் உந்தன் நினைவால்
எனக்கு சுட்டிட வேண்டும்
நீ வந்ததும் உன்னை வந்து
கட்டி அணைத்திட வேண்டும்....♥

மாலை நேரம் உன்னுடன் தேநீர்
சுவைத்திட வேண்டும் ..என்
தோள்களிலே உன்னை அணைத்து
உந்தன் உஷ்ணகாற்று எந்தன்
காதோரம் கதை பேச பதிலுக்கு
உந்தன் கழுத்தோரம் நான்
என் இதழ் பதித்திட வேண்டும் ....♥

இப்படியே உன்மீது பித்துக்கொண்டு
நான் வாழ்ந்திட வேண்டும்
வாழும் காலம் வரை உனக்கு
சேவை செய்திடும் உந்தன்
காதல் அடிமையாய்.......♥

நீ இன்றி நான் தனித்திருக்கும்
நிமிடங்கள் உந்தன் நினைவால்
எனக்கு சுட்டிட வேண்டும்
நீ வந்ததும் உன்னை வந்து
கட்டி அணைத்திட வேண்டும்....♥

மாலை நேரம் உன்னுடன் தேநீர்
சுவைத்திட வேண்டும் ..என்
தோள்களிலே உன்னை அணைத்து
உந்தன் உஷ்ணகாற்று எந்தன்
காதோரம் கதை பேச பதிலுக்கு
உந்தன் கழுத்தோரம் நான்
என் இதழ் பதித்திட வேண்டும் ....♥

இப்படியே உன்மீது பித்துக்கொண்டு
நான் வாழ்ந்திட வேண்டும்
வாழும் காலம் வரை உனக்கு
சேவை செய்திடும் உந்தன்
காதல் அடிமையாய்.......♥