உயிரை பிழியும் உந்தன் நினைவு உனக்கு தெரியுமா?
ஊமை ஆனேன் உன்னால் தானே உணர முடியுமா?
இருக்கும் வரைக்கும் இல்லை என்று சொல்ல விருப்பமா?
இழந்து விட்டால் திருப்பி பெற இதயம் கிடைக்குமா??
இங்கே இன்பம் இருக்குமா சொல் இரும்பும் பேசுமா????
என் இதழ்களைக் கேட்டுப் பார் என் நெஞ்சத்தின் வேதனை சொல்லும்!!!
என் இமைகளைக் கேட்டுப் பார் என் கனவுகள் கலைந்த விதம் சொல்லும்!!!
என் இதயத்தைக் கேட்டுப் பார் என் ஆசைகள் சிதைந்த விதம் சொல்லும்!!!
என் இரவைக் கேட்டுப் பார் கண்ணீர் வடிக்கும் என் உன் நினைவுகளைச் சொல்லும்!!!
என் மௌனத்தின் அர்த்தமே உனக்குப் புரியாத போது என் கண்ணீரின் அர்த்தமா உனக்குப் புரியப் போகிறது???
No comments:
Post a Comment