Monday, October 17, 2011

உயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்

மெல்லச் சிரித்து வந்தாள்
கண்கள் எரித்து வந்தாள்
.
நெஞ்சகம் புகுந்தாள்
வஞ்சகம் புரிந்தாள்
.
மனம் சிதற வைத்தாள்
இதயம் பதற வைத்தாள்
.
உருவம் மெலியவைத்தாள்
உள்ளம் நலிய வைத்தாள்
.
உயிர் உருக வைத்தாள்
ஊன் எரிய வைத்தாள்
.
என் காதல் கொன்றாள்
ஏனோதான் சென்றாள்

No comments:

Post a Comment