Monday, October 17, 2011

உன் நினைவால்.......

ஒரு
ஓரமாய் அமர்ந்திருந்து
உன்னை
நேசித்த ஒவ்வொரு
கணத்தையும் சிந்தித்துப்
பார்க்கிறேன்
என்
இதயம் கூட
நான் சொல்வதை மறுத்து
என்னை விட்டு
வெகு தூரத்தில் பயணிக்கின்றது.
புண்பட்ட என்
மனம்
உன்னை மறக்கக் கூட
முடியாமல் பதைத்துக்
கொண்டிருக்கிறது.
ஏன் உன்னைப்
பார்த்தேன்...?
ஏன் உன்னை நேசித்தேன்.?
எப்படி நீ என்னுள்
வந்தாய்.?
இன்றும் கூட புரியவில்லை
புலம்புகின்றேன்
உன்
நினைவால்

No comments:

Post a Comment