காதலித்துப்பார்!
காதலித்துப்பார்!
உனக்குள் இதயமென்று ஒன்று இருப்பதை உணர்வாய்!
அதற்குள் ஒரு ஜீவன் உயிர்ப்பதை உணர்வாய்!
தடித்த மனம் கூட அவளுக்காய் துடிக்கும்!
தனிமையின் தவிப்புக்கள் விழிகளில் தெரியும்!
காதலித்துப்பார்!
உலகில் உன்னவள் மட்டும் அழகாக தெரிவாள்!
பெண்மையின் நளினம் கண்டு உன் செயல்களெல்லாம் மனிதமாகும்!
அவள் வதனம் கண்டு,உன் ஆண்மை கூட துள்ளித்திரியும் மான்குட்டியாகும்!
கால்கள் விண்வெளியில் மிதக்க, நினைவுகளோ செலவில்லாமல் செவ்வாய்க்கு பறந்துவிடும்!
காதலித்துப்பார்!
அவள் அழகை இரசிக்க இயற்கையைத் துணைக்கழைப்பாய்!
நடுநிசியில் நிலாவின் முகம் பார்த்து புலம்புவாய்!
விண்மீன்கள் கூட உன் காதல் கதை கேட்டு கண்சிமிட்டும்!
பூக்கள்,கடல்,மலைகள் என இறைவனின் படைப்புக்கள் யாவும் உனக்கு பிடித்ததாகும்!
காதலித்துப்பார்!
வாழ்க்கையில் அன்பின் வேகத்தை புரிந்துகொள்வாய்!
கோபத்தின் தாகம் அது உனக்கு விடாய்க்காது!
வாழ்க்கையில் வேண்டாத இறைவனை அவளுக்காய் நினைத்துப்பார்ப்பாய்!
அவளுக்கு பிடித்தவைகள் உன் வீட்டை அலங்கரிக்கும்!
காதலித்துப்பார்!
செல்போன் உனக்கு கடவுள் ஆகும்!
SMS அதன் வரமாகும்!
தினமும் காட் அதற்கு இரையாகும்!
அதுவே உனக்கு தொழிலாகும்!
காதலித்துப்பார்!
பரீட்சையில் வராத பயத்தை அவள் உதடுகள் சொல்லப்போகும் வார்த்தையில் உணர்வாய்!
அவள் பெயர் மட்டும் தினமும் உச்சரிக்கும் மந்திரமாகும்!
படிப்பு என்றால் பத்தடி பாய்ந்தோடும் உனக்கு அவள் பற்றி யாவும் மனப்பாடம்!
புத்தகம் தலைகீழாகும்,அது கூட தெரியாமல் அவள் முகம் அதில் நிழலாடும்!
காதலித்துப்பார்!
இரவின் நீளத்தை அறிந்துகொள்வாய்!
தலையணை அவள் மடியாகும்!
உடல் மட்டும் உறங்க உணர்வுகள் கனவில் விழித்தெழும்!
உன் கனவை கலைக்க ஆதவன் விழித்தெழ தயங்குவான்,சேவல் கூவ தயங்கும்,அலாரம் அடிப்பதும் கேட்காது!
காதலித்துப்பார்!
அவள் தரிசனம் பெற வீதியோரம் காத்திருப்பாய்!
கால்கள் அவள் செல்லுமிடமெல்லாம் நடைபயிலும்!
பலமுறை கண்ணாடி பார்ப்பாய்,அவள் முகம் காண!
எந்தபெண்ணும் அவளாக தெரிவாள்!
காதலித்துப்பார்!
சோலைவனம் கூட பாலைவனமாகும்!
கண்ணீர் நைல் நதியாய் பெருக்கெடுக்கும்!
இதயம் வெடிப்பதை உணர்வாய் பூகம்பமாய்!
துன்பக்கடலில் மூழ்கி சோகத்தின் ஆழத்தை அறிவாய்!
காதலித்துப்பார்!
பாடல்கள் மனதிற்கு துணையாகும்!
கண்ணீர் பேனாவின் மையாகும்!
கவிதைகள் கையில் மடலாகும்!
அவள் ஞாபகங்கள் படரும் கொடியாகும்!
காதலித்துப்பார்!
மறதிகள் மறந்துவிடும்!
நினைவுகள் நெருங்கிவிடும்!
உறவுகள் இருந்தும் அநாதையாய் உணர்வாய்!
உயிர் இருந்தும் நடைபிணமாவாய்!
காதலித்துப்பார்!
உன் மேல் நீயே வெறுப்பை உணர்வாய்!
உன் உயிர் கூட மயிர் போல அற்பமாகிவிடும்!
மனச்சிறையிலே,சித்திரவதையை தாங்கமுடியாது,மரணத்தை நெருங்கப் பார்ப்பாய்!
மொத்தத்தில் நீ இறக்காமலே இப்பூமியில் உனக்கு சொர்க்கமோ நரகமோ நிச்சயம்!
அது அவள் கைகளில்...................
காதலித்துப்பார்!
No comments:
Post a Comment