Monday, October 17, 2011

உன் நினைவுகளை எது வந்து அழிக்கும்

நீ அனுப்பிய குறுந்தகவல்கள்
உள் பெட்டகத்தில் அழிந்துவிட்டன

இணந்திருந்து எடுத்த நிழற்படங்களும்
அழிந்தே போய் விட்டன

தெய்வீகமாய் இசைத்த உன் குரல்களை
தென்றல் வந்து அழித்துவிட்டது

கைகோத்து நாம் நடந்த காற் தடங்களை
கடலலைகள் அழித்துவிட்டன.

என் உதட்டில் உன் உதட்டின் ஈரத்தை
காற்றலைகள் அழித்துவிட்டன.

உடல்களின் உல்லாச உரசல்களை
உணர்வலைகளாய் அழிந்த்துவிட்டன.

என் நெஞ்சத்தில் உன் நினைவுகளை
எது வந்து அழிக்கும்...

No comments:

Post a Comment