Monday, October 17, 2011

உன்னோடு ஏன் வந்தது

உனை அணைத்த கைகள்
என்னோடிருக்கின்றன
உன்னோடு வரவில்லை

உன் பெயர் உரைத்த உதடுகள்
என்னோடிருக்கின்றன
உன்னோடு வரவில்லை

உனை நாடி நடந்த கால்கள்
என்னோடிருக்கின்றன
உன்னோடு வரவில்லை

உனைச் சுமந்த என் இதயம்
என்னோடில்லை
உன்னோடு ஏன் வந்தது

No comments:

Post a Comment