Friday, April 6, 2012

காத்திருப்பு

உன் மீதான காதலும்
வசப்படாத
வார்த்தைகளும்
சுகப்படாத மனசுமாய்
என் கவிகள்
இன்னும்
நெய்யப்படாமல்
காத்திருக்கின்றன
நீ விபரம் தெரியாத
சிறு பிள்ளையும் அல்ல
மனத்தறியில்
எத்தனை நாள்
உன் வார்த்தைக்காக
காத்திருப்பது.

No comments:

Post a Comment