Friday, April 6, 2012

கைபேசி காதல்…!

நீ கை பேசி அழைப்பை துண்டித்த மறு
நொடியில் மீண்டும் அழைப்பு வருமோ..
என காத்திருக்க தொடங்கிவிடுகிறது மனது..
வெகுநேரம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
நீ அழையாத என் கைபேசியை...

எடுத்தெடுத்துப் பார்க்கிறேன் நீ அனுப்பிய
பழைய குறுஞ்செய்திகளை
வினாடிகளையும் தோற்கடிக்கும் நம்
அடுத்தடுத்த பதில் பரிமாற்றங்கள்..
நீ அனுப்பும் குறுஞ்செய்திகளோடு
சேர்த்தே அனுப்புகிறாய் உன் பிரியங்களையும்..

சில நேர கைபேசி சண்டைகளில்
ஒருவருக்கொருவர் செல்லமாய் கோபித்து
சிரிக்காமல் சீண்டுவோம்..  சிணுங்கியபின் சிக்கிடுவோம்
சமாதானம் எனும் சிறையில்..
அதன் சமாதான வார்த்தைகளில்
தெரிக்கத் துவங்கிவிடுகிறது உனதன்பு...

நீ அழைத்து பேசிய நிமிடங்களையும்
நான் அழைக்காமல் விடுத்த நிமிடங்களையும்
பதிவு செய்தே வைத்திருக்கிறது என் கைபேசி...

காத்திருத்தல்.. காக்க வைத்தல்
இரண்டும் சுகமானதல்லவா காதலில்..!?

இப்போதெல்லாம் நீ அழைத்து பேசும்
நிமிடங்களுக்காய் காத்திருக்கத் துவங்கி விட்டோம்
நானும் எனது கை பேசியும்...

No comments:

Post a Comment