Friday, April 6, 2012

மீண்டும் ஓரு முறை

கண்டேன் அவளை அன்று
காணவில்லை என் மனதை இன்று
கண்களால் எனைக்கொன்று
திருடிவிட்டாள் இதயத்தினை
திருப்பிக் கேட்டிட
முடியவில்லை - ஏனெனில்
அவள் இதயம் திருடிய
கள்வன் நானல்லவா?
இதயத்தைக் களவாடி விட்டு
இன்னுமேனடி மௌனம்!
தாங்க முடியவில்லை காதலின் இம்சை
பசியில்லை உறக்கமில்லை
பறக்கிறது மனசு அவள் நினைவில்
விழிகளால் நிறுத்தி அவளை
விளக்கவில்லையா!
என் எதிர்பார்ப்பு என்றேன்
புரிந்துக் கொண்டான்
அவள்
எழதினாள் மடலில்
I LOVE YOU என்று
அடைந்தேன் அளவிலா ஆனந்தம்
கடிதம் வாசித்தது கனவில்
என்பதை அறியாமல்.........

No comments:

Post a Comment