Wednesday, April 4, 2012

காதல்

உள்ளத்தின் பூரிப்பில்
மலரும் வார்த்தைகள்
ஆத்மாவின் துடிப்பை
ஆரத்தழவியபடி
அரங்கேற்றுவது காதல்

நினைவுகளை கூட
நிசப்தமாய் கண்டு
கனவுகளை நிஐமாக்கி
கூடவே உணர்வுடன்
இதய துடிப்பை
இசையென ரசித்து
இன்பதுன்பத்தில் ஒன்றாய்
கலந்ததே காதல்

சோகத்தைக் கூட
சுகமாய் மாற்றி
இதயத்தின் நாளத்தில்
நாதமாய் ஓலிக்கும்
நிஐமான கீதமே காதல்

தேடியும் கண்டு பிடிக்க முடியாத
தேசத்திற்கு போன பின்னும்
நினைவுகளில் நம்பிக்கையில்
சுவாசங்கள் தூக்கழிந்து
காத்திருப்பதும் காதல் தான்!

No comments:

Post a Comment