Friday, April 6, 2012

எங்கே

என் நிலைமைதானா உனக்கும்?
நான்
நகம் கடித்துவிட்ட - உன்
பிஞ்சுக் கைகள் எங்கே?

சொடுக்கேடுத்துவிட்ட
பஞ்சுக் கால்கள் எங்கே?

என்
மார்பு நனைத்த
சூடான சுவாசம் எங்கே?

இதமாய்
என் கன்னம் சுட்ட
ஈரமான இதழ்கள் எங்கே?

நான்
பார்த்து பார்த்துப்
பசிமறந்த
மான் விழிகள் எங்கே?

நான்
கேட்டுக் கேட்டுக்
காது நிறைந்த
தேன் மொழிகள் எங்கே?

சாப்பிட்டு
நான் கைதுடைத்த
உன் துப்பட்டா எங்கே?

போர்த்திட்டு
நான் படுத்த -உன்
புடவைகள் எங்கே?

உன்னுடன் சேர்த்து - உன்
உடைமைகளையும் இழந்து
தவிக்கிறேன் இங்கே

சொல்
என் நிலைமைதானா
உனக்கும் அங்கே?

No comments:

Post a Comment