Friday, April 6, 2012

காதலும் கடைசியில்

நின் மை விழி பார்வைகள் என் விழியிலே
நெய்யாக பொழிந்தன அன்று

நின் பேச்சுக்களின் சத்தங்கள் என் செவிகளிலே
சப்தங்களாய் பொழிந்தன அன்று

நந்தவன பூக்களாய் மட்டும் எனக்கு
காட்சியளித்த உனக்குள்
முட்களும் உள்ளன என்று
உன் ஓரு வார்த்தைகளினால்
காண்பித்தாய் அன்று

ஆயினும் உன்னிடம் ஓரு
வேண்டுகோள் இன்று
உன் அன்பை அனைவருக்கும்
செலுத்து ஆனால் உன் இதயத்தை
மட்டும் ஓருத்தனுக்கு கொடு
இப்பொழது நீ தொலை தூர
அந்தி வானில் நட்சத்திரம் போல்
நான் புவியில் புல் பூண்டுகள் போல்
உன்னிடம் வருவதாயின்
நவீன யுகத்தில் ஓன்று  செய்கின்றேன்
நாசாவின் விண்வெளி நிலையத்தை
நாடிப் பார்க்கிறேன் இன்று

No comments:

Post a Comment