நின் மை விழி பார்வைகள் என் விழியிலே
நெய்யாக பொழிந்தன அன்று
நின் பேச்சுக்களின் சத்தங்கள் என் செவிகளிலே
சப்தங்களாய் பொழிந்தன அன்று
நந்தவன பூக்களாய் மட்டும் எனக்கு
காட்சியளித்த உனக்குள்
முட்களும் உள்ளன என்று
உன் ஓரு வார்த்தைகளினால்
காண்பித்தாய் அன்று
ஆயினும் உன்னிடம் ஓரு
வேண்டுகோள் இன்று
உன் அன்பை அனைவருக்கும்
மட்டும் ஓருத்தனுக்கு கொடு
இப்பொழது நீ தொலை தூர
அந்தி வானில் நட்சத்திரம் போல்
நான் புவியில் புல் பூண்டுகள் போல்
உன்னிடம் வருவதாயின்
நவீன யுகத்தில் ஓன்று செய்கின்றேன்
நாசாவின் விண்வெளி நிலையத்தை
நாடிப் பார்க்கிறேன் இன்று
No comments:
Post a Comment