உன் கண்களில் ஒர் துளி
நீர் வந்தாலும் பதறிவிடும் - என்
இதயம் என்றாயே அன்று - ஆனால்
இன்றோ என்னை ஊமையாய்
அழ விட்டு என் உணர்வுகளைப்
புரியாதவள் போல் வேதாந்தம் பேசி
விலகிப் போகின்றாய்
வேடிக்கையாகக் கூட பாவி
நான் எண்ணவில்லை நீ
வேசம் போடும் வேடதாரி என்று
ஆனாலும் என்ன செய்வேன்
உண்மைகளையும்
உணர்வுகளையும்
மாத்திரைமாய் விழங்கி விட்டு
மௌனமாய்க் கரைகின்றேன் நீயோ
என்னை தீ எனும் சொல்லால் சுட்டு
சுகமும் காண்கின்றாய் ஆனாலும்
உன் முத் திரையில்
சிறு கறை கூட
தோன்றவில்லையே............
நீ ராட்சசியா?
ராட்சசி?
நான் புரியவில்லை
எனினும்
உன் மீது
நான் கொண்ட
காதல் மட்டும்
உண்மை என்று
என் கல்லறைக்கு
பூ வைக்கும் நேரம்
நீ புரிந்நு
கொள்வாய்.......
No comments:
Post a Comment