Friday, April 6, 2012

நீ


தொலைதுாரத்தில் நீ இருக்கிறாய் என்று
தெரிந்தும் யாரோ உன் பெயரை உச்சரித்தாலே
நீயாக இருக்ககூடாதா என ஏங்குகிறது 
பேதை இவள் நெஞ்சம்.......
வீதி ஒரம் நான் செல்லும் வேளையில்
உன்னைப் போல யாரும் சென்றாலே ஒதுங்கி நிற்கிறன்
ஏன் தெரியுமா ? உன்னைத் தவிர எந்தன் நெஞ்சமும் கண்களும்
இன்னொருத்தனை ரசிக்ககூடாது என்பதற்காக
மனசு உன்னை இன்னொருவனுடன் 
ஒப்பிட்டு பார்க்க கூட விரும்பவில்லை..
உந்தன் அரவணைப்பிற்காக...உன்னுடனான
நிஜங்களுக்காக மறு ஜென்மம் 
வரை காத்திருக்கிறன்...
ஆனால் என் இதயத்திற்கு
அது ஏழு ஜென்மமாய் தெரிகிறது.....

No comments:

Post a Comment