Friday, April 6, 2012

நீ ஓர் தாமரை

பூக்களுக்குள் பூவாய் இருந்த உன்னை
பிடித்ததால் பறித்துக் கொண்டேன்
எப்போதும் என்னிடத்தே இருப்பாய் என
என் கிணற்றில் இறக்கிவிட்டேன்
இப்போது கிணற்று
நீர் தான் கசக்கிறதா?
ஏறி ஓடி விட படிகள்
இன்றி தவிக்கிறாயா?

இப்போது
மனம் வேகிறது
எப்போது நீ
என்னிடத்தே இருப்பாயா?
அல்லது என்னைப் பிரிந்து
சொல்வாயா?
தாமரையே சொல்?

No comments:

Post a Comment