உன் நினைவுகளோடு
ஒரு பென்சில் சீவினால்
அது என் விரல்களையே
சீவி விடுகிறது
என் தெருக்களில் ஒலிக்கின்ற
ஒவ்வொரு பாடல்களும்
ஞாபகப்படுத்துவதாய்..............
திருவிழாவில் தொலைந்த
ஒரு சின்னக் குழந்தை போல
நீயில்லாத இந்தக் காதலர் தினம்
எனக்குள் நிம்மதி
தொலைந்து நிற்கிறது
இப்போதெல்லாம்
உன் சேதி சொல்லாத
இந்த அண்டங் காகத்தை
என் வீதியின்
மருங்கில் வைத்தே
விரட்டியடிக்கின்றேன்
காலையில்
காகம் கரைந்தால்
உன் கடிதம் தான்
வரப் போகிறது
என்கின்ற
ஒரு பொய்யான ஜதீகம்
கடந்த காலங்களில் என்னில்
ஊறிப்போய் கிடக்கிறது
நீயே இல்லையென்று
ஆன போது
நீயில்லாத காதலர் தினம்?
No comments:
Post a Comment