Wednesday, April 4, 2012

அழகியே தீயே!

எந்தன் கண்களில்
புகுந்து
மனதுக்குள் நுழைந்து
இதயத்தில் அன்பு ஆசனம்
போட்டு அமர்ந்து
விட்ட அழகிய தீயே
எந்தன் விழிகளில்
என்றுமே அழியாத
ஓவியம் நீ!
எந்தன் இரவுகளில்
என்றுமே மறையாத
கனவு நீ!
எந்தன் வானத்தில்
என்றுமே தேய்ந்திடாத
நிலவு நீ!

No comments:

Post a Comment