காதலியே!
கண்ணாமுச்சி
ஆடுகிறாயா?
காதல் உனக்கோர்
பகடைக் காயா?
வேர் விட்ட அன்பு
வேதனை அம்புகளை
வெட்கமின்றி எய்து
வேடிக்கை பார்க்கிறாயா?
கேளிக்கை ஆகாது
காலம் உள்ளவரை
என் காதல்..........
கெஞ்சிக் கேட்கிறேன் உனை
கொஞ்சும் தன்மை நானறியேன்
எனக்கென்றே பல கோட்பாடுகள்
என்னுள்ளே...........
விதைத்து நாட்களாயிற்று..........
விதைத்த விதைகள் சிலதை
விரைவாய் எடுத்தெறிந்தாய்
மீதியை அழித்திட
தாமதம் நிச்சயமே
தயவாய் இறைஞ்சுகிறேன்
கட்டிய வேலியை
கழற்றிய தகர்த்தெறிந்து
தலைவனின் தலைவியாய்
தவமிருப்பேன்..........
தனித்திருப்பேன் உனக்காய்
உலகு முடியும் வரை..........என்
உயிர் முச்சு நிற்கும் வரை..........
No comments:
Post a Comment