Friday, April 6, 2012

காதல் கவிதைகளென…….

நீ
கண்ணீரை விட
ஆழமானவள்….
சோகத்தை விட
அழகானவள்…!


உன்னைக் காதலிப்பதற்கு
பதிலாக
மரணத்தை
காதலித்திருக்கலாம்….
அது வாக்குத்
தவறுவதேயில்லை….!

உன் பாதையும்
என் பாதையும்
வேறு வேறாக இருக்கலாம்….
ஆனால் அவை
ஒரே கையின்
ரேகைகள்….!

நீ என்னைப் பார்த்து
ஒரு முறைதான் சிரித்தாய்….
அதனால் நான்
வாழ்க்கை முழுவதும்
அழுதுகொண்டிருக்கிறேன்….!

தரையிலிருந்து
பொறுக்கிய காகிதத்தில்
கவிதை கிடைத்ததைப்போல்
நீ என் வாழ்க்கையில்
நேர்ந்தாய்…!

நான் உனக்குத்
தகுதி இல்லாதவனாக
இருக்கலாம்
என்னைத்
திருஷ்டிப் பொட்டாகவாவது
வைத்துக் கொள்ளேன்…!

காதலில்
கண்ணீருக்கும்
புன்னகைக்கும்
எப்போதும் போட்டி
கண்ணீரே
எப்போதும் ஜெயிக்கிறது…!

உன் இதயத்திற்குள் நுழைய
வழி பார்க்கிறேன்…!
ஊசியின் காதைத் தேடும்
பார்வை மங்கிய
கிழட்டுத் தையல்காரனைப் போல


உன் கண்களின் அழைப்பை
நான் தவிர்க்க முடியாது
எமனின் பாசத்திலிருந்து
யார் தப்பிக்க முடியும்?


No comments:

Post a Comment