Friday, April 6, 2012

காதல்...

பலருக்கு
தொட முயன்று
தோற்றுப் போன
தூரத்து உறவு
காதல்.....!

சிலருக்கு
தொட்டுப் பார்த்து
ஷாக் அடித்த
மின்சாரக் கனவு
காதல்.....!

கண்ணில் தோன்றி
கற்பனையில் வடிவெடுத்து
காலம் உள்ளவரை
கலந்திருப்பது காதல்.....!

கண்கள் விடும்
கணைகளால் - இருதயம்
இலக்கு வைக்கப்படுவது
காதல்.....!

சுகமும்
ஓர் சுமையாக.....
அந்த சுமையும்
ஓர் சுகமாக.....
சுட்டெரிப்பது காதல்.....!

கண்களால் கதை பேசி.....
மௌனத்தால் விடை எழுதி.....
கனவை நனவாக்க
வாழ்வது காதல்.....!

அவள் கண்வெட்டு
அவன் இதயத்தில்
கல்வெட்டாகி - பின்
மின்வெட்டு நேரத்தில்
கவியாவது காதல்.....!

அவனையும் அவளையும்
பிடித்த அவர் உறவுகளுக்கு
அவர்களை பிடிப்பதில்லை.....
இதுவே காதல்.....!

ஊரெ எதிர்த்தாலும்.....
உறவுகள் கூடி தடுத்தாலும்.....
வாழ்ந்தால் உன்னோடு - இல்லை
மண்ணோடு என்று
சொல்வது காதல்.....!

இரு நெஞ்சம்
கலப்பது காதல்.....!
இருதயம் இடம்மாறி
துடிப்பது காதல்.....!

அவன் அவளுக்குள்ளும்.....
அவள் அவனுக்குள்ளும்.....
புதைவது காதல்.....!

உன்னுள்ளும் என்னுள்ளும்
வாழும் காதல்
வானம் உள்ளவரை
வாழட்டும் காதல்.....!

No comments:

Post a Comment