உன்னோடு பேசும் ஒரு நொடி....
உன்னோடு நான் பேசும்
ஒரு ஒரு நொடியும்
உன்னை பார்க்காத
பல மணி நேரங்களில்
அசை போட
எனக்கு ஒரு முழு
விருந்தாக உள்ளது.
அது நீ என் மூச்சாக இருந்த வரை
ஆனால் இன்று நீ இன்னொரு
ஜீவனுக்கு சொந்தமான பின்
உனக்கு என்னை நினைத்து
பார்க்க கூட நிமிடம் கிடைக்காதே?
உனது வாழ்க்கை பாதை மாறியதால்
உனக்கு என்னை நினைக்க
நேரம் இருக்காது.
ஆனால் உன் நினைவலைகளில்
சிக்கிய நான் செத்து விடுவேன்.......
No comments:
Post a Comment