பெண்ணே!
உன் ஓரவிழிப் பார்வையினால்
குருடனாகிப் போனேனடி!
உன் மயக்கும் புன்னகையால்
மனதினைத் தொலைத்தேனடி!
உன் மௌன மொழி கேட்டு
ஊமையாகிப் போனேனடி!
உன் அன்ன நடை கண்டு
மொத்தத்தில் நான் உன்னைக்
கண்டதால் பைத்தியமாகிப்
படுக்கையில் போனேனடி!
பெண்ணே!
பார்வையற்ற என் கண்கள்
உன்னைப் பார்க்கத் துடிக்குதடி!
பேச முடியாத என் வாய்
உன்னோடு பேசத்துடிக்குதடி!
ஊனமுற்ற என் கால்கள்
உன்னோடு நடைபயில
துடிக்குதடி!
வந்து விடு....
என்னவளே
வைத்தியம் பார்த்து விடு
என் நோய்களிற்கு.......
This comment has been removed by a blog administrator.
ReplyDelete