Friday, April 6, 2012

முடியவில்லை....

கண்கள் மூடி தூக்கத்தை
தேடினேன் முடியவில்லை
கண்ணுக்குள் தெரிவது
நீ அல்லவா?


நீதான் என்னை
மறந்து விட்டாயே
இல்லை...இல்லை..
நம் காதலை..
மறுபடியும் ஏன்
வருகிறாய்? என்
நினைவுக்குள்.

மறக்கவே முடியவில்லை
உன்னையும் நம்
காதல் நினைவுகளையும்
மறந்துவிட
அது என்ன நினைவுகளா?
இல்லை..
என் வாழ்வின் நியங்கள்.

நானும் உன்னை
மறந்திடலாம்
என்றென்னி இறைவனிடம்
வேண்டி நின்றேன்
அவனும் என்னை மறுத்துவிட்டான்

மறுபடியும் வேண்டுகிறேன்
என் வாழ்வில்
நீ வேண்டும் இல்லையேல்
உன் நினைவில்
சிறிதேனும் எனக்கு வேண்டாம்.

1 comment: